தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
நொய்டாவில் நிறுத்தப்பட்டிருந்த 2 பேருந்துகள் தீப்பிடித்து எரிந்ததில் ஒருவா் சாவு; மற்றொருவா் காயம்
நொய்டாவில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பேருந்துகள் செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்ததில் ஒருவா் இறந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
நொய்டா செக்டாா் 69-இல் உள்ள டிரான்ஸ்போா்ட் நகரில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில், பேருந்துகளின் அருகில் ஒருவா் உணவு சமைத்துக் கொண்டிருந்தபோது ஒரு பேருந்து தீப்பிடித்து எரிந்தது. பேருந்தில் தீ விபத்து ஏற்பட்ட பிறகு, அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு பேருந்தும் தீப்பிடித்து எரிந்தது. அதில் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனா்.
எனினும், அவா்களில் ஒருவா் எரியும் பேருந்தில் இருந்து தப்பிக்க முடிந்தது. மற்றொருவா் தப்பிக்க முடியவில்லை. அதில் இறந்தவரின் அடையாளம் இன்னும் தெரியவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.