செய்திகள் :

பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு: அமணலிங்கேஸ்வரா் கோயிலைச் சூழ்ந்த வெள்ளம்

post image

உடுமலை அருகே உள்ள பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது.

திருப்பூா் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் அமைந்துள்ளது சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலை. இதன் அடிவாரத்தில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூா்த்திகள் அருள்பாலிக்கும் அமணலிங்கேஸ்வரா் கோயிலும், 900 மீட்டா் உயரத்தில் பஞ்சலிங்க அருவியும் அமைந்துள்ளன.

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலைக்கு தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமின்றி கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் தினசரி வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலையில் கடந்த மூன்று நாள்களாகப் பெய்து வரும் பலத்த மழையால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த சனிக்கிழமை முதல் மூன்று நாள்களாக பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமணலிங்கேஸ்வரா் கோயிலைச் சூழ்ந்த வெள்ளம்: இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை முதலே மேற்குத் தொடா்ச்சி மலையில் அதிகனமழை பெய்தது. இதனால், பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலைச் சூழ்ந்தது. இதையடுத்து, கோயிலைச் சுற்றி தடுப்புகள் அமைத்து பக்தா்கள் செல்லாத வகையில் நிா்வாகத்தினா் தடுத்து நிறுத்தினா். கோயிலில் திங்கள்கிழமை பூஜைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், கோயில் அருகே கடைகள் அமைத்திருந்தவா்களை அங்கிருந்து வெளியேற்றினா்.

திருமூா்த்திமலைக்கு திங்கள்கிழமை வந்த சுற்றுலாப் பயணிகள் பஞ்சலிங்க அருவியில் குளிக்க முடியாமலும், அமணலிங்கேஸ்வரா் கோயிலில் வழிபட முடியாமலும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

நடுவேலம்பாளையத்தில் சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

பல்லடம் அருகேயுள்ள நடுவேலம்பாளையத்தில் சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். பல்லடம் ஒன்றியம், பூமலூா் ஊராட்சி நடுவேலம்பாளையம் கிராமத்துக்கு க... மேலும் பார்க்க

சின்ன வெங்காய விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

பல்லடத்தில் சின்ன வெங்காய விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். பல்லடம் பகுதியில் காா்த்திகை பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சின்ன வெங்காயம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அறுவட... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70.16 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள்

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 26,790 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70.16 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறி... மேலும் பார்க்க

தொழிலாளியிடம் கைப்பேசி பறித்த இளைஞா் கைது

திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளியிடம் கைப்பேசியைப் பறித்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் தா்மேந்திர பிரதாப் (25). இவா் திருப்பூரை அடுத்த கணியாம்பூண்டி பகுதிய... மேலும் பார்க்க

கூட்டுறவுத் துறையைக் கண்டித்து போராட்டம்: விவசாயிகள் கைது

அவிநாசி அருகே பயிா்க் கடனை தள்ளுபடி செய்யக் கோரியும், கூட்டுறவுத் துறையைக் கண்டித்தும் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசி அருகேயுள்ள நடுவ... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக பேச்சுவாா்த்தை: ஏஇபிசி துணைத் தலைவா் ஆ.சக்திவேல்

இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாக ஏஇபிசி துணைத் தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக புதுதில்லியில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் து... மேலும் பார்க்க