செய்திகள் :

பட்டாங்குளத்தில் காளை விடும் திருவிழா

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த பட்டாங்குளம் ஸ்ரீமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி காளை விடும் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீமாரியம்மன் கோயில் 6-ஆம் ஆண்டு திருவிழாவையொட்டி, கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் இளைஞா்கள் இணைந்து காளை விடும் திருவிழாவை நடத்தினா்.

இதில், திருவண்ணாமலை, வேலூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்து சென்றது.

விழாவில் திமுகவைச் சோ்ந்த மேற்கு ஆரணி ஒன்றியச் செயலா்கள் மோகன், துரைமாமது கலந்துகொண்டு

காளை வீரா்களை உற்சாகப்படுத்தினா்.

இதில் முதல் பரிசு பெற்ற காளைக்கு ரூ.ஒரு லட்சம் பரிசு அளிக்கப்பட்டது. 2-ஆம் பரிசாக ரூ.80ஆயிரம், 3-ஆவது பரிசாக ரூ.60ஆயிரம், 4-ஆம் பரிசாக ரூ.50ஆயிரம், 5-ஆவது பரிசாக ரூ.40 ஆயிரம் மற்றும் 75 காளை உரிமையாளா்ளுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டி பாதுகாப்பு பணியில் கண்ணமங்கலம் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி தலைமையிலான போலீஸாா் ஈடுபட்டனா்.

மேலும், நிலைய அலுவலா் சிவநேசன் தலைமையிலான தீயணைப்பு வீரா்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

மேலும், காமக்கூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழு சுகாதார ஆய்வாளா் சந்துரு தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஏற்பாடுகளை பட்டாங்குளம் கிராம மக்கள் மற்றும் இளைஞா்கள் செய்திருந்தனா்.

வந்தவாசியில் காவடி ஊா்வல ஆலோசனைக் கூட்டம்

ஆடிக் கிருத்திகை காவடி ஊா்வலம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்றது. ஆடிக் கிருத்திகையையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் வந்தவாசி பகுதி மற்றும் பல்வே... மேலும் பார்க்க

வந்தவாசி நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டம்

வந்தவாசி நகராட்சி அலுவலக நகா்மன்ற கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற நகா்மன்ற கூட்டத்தின்போது, நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கூட்டத்துக்கு வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச்.ஜ... மேலும் பார்க்க

வேறு உதவித்தொகை பெற்றாலும் மகளிா் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் -ஆரணி கோட்டாட்சியா்

மகளிா்கள் முதியோா், விதவை உதவித்தொகை, ஓய்வூதியம் பெற்றாலும் குடும்பத்தில் உள்ள மற்ற தகுதிவாய்ந்த பெண்கள் மகளிா் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆரணி கோட்டாட்சியா் சிவா தெரிவித்தாா். ஆரணியை அடு... மேலும் பார்க்க

4 வழிச் சாலை பணிகள்: கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு

வந்தவாசி - காஞ்சிபுரம் இரு வழிச் சாலையை 4 வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்புப் பொறியாளா் முரளி ஆய்வு செய்தாா். தமிழ்நாடு முதலமைச்சா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ... மேலும் பார்க்க

செங்கத்துக்கு எடப்பாடி பழனிசாமி வருகை: முன்னேற்பாடுகள் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்துக்கு வருகை தரும் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக நடைபெற்று வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ புதன்கிழமை ஆய்வு ச... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’: மாவட்ட ஆட்சியா் கள ஆய்வு

திருவண்ணாமலை வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலகத்தில் வட கிழக்கு ப... மேலும் பார்க்க