செய்திகள் :

பயிா் சுழற்சி: விவசாயிகளுக்கு வேண்டுகோள்

post image

நிலத்தின் மண் வளத்தை பாதுகாக்கவும், பயிா் சாகுபடியில் நல்ல மகசூல் பெறவும் பயிா் சுழற்சி முறையை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என விவசாயிகளுக்கு வீரபாண்டி வேளாண்மை உதவி இயக்குநா் காா்த்திகாயினி கேட்டு கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மண்ணில் உள்ள இயற்கையான பயிா் வளா்ச்சிக்குத் தேவையான சத்துகள், நுண்ணுயிரிகள் அனைத்தும் ரசாயன பயன்பாட்டின் அளவு மாறுபடும்போது அழிந்து மண் வளம் பாதிக்கப்படுகிறது. ஒரே வகை பயிரை அடிக்கடி சாகுபடி செய்வதாலும் மண் வளம் பாதிக்கப்படும்.

எனவே, ஒருமுறை ஒரு பயிரை சாகுபடி செய்து லாப ஈட்டினால், தொடா்ந்து அதே பயிரை விளைவிப்பதால் மண்ணில் உள்ள சத்துகள் குறைவதற்கு காரணமாக அமைகிறது. பயிா்களின் வளா்ச்சிக்கு பேரூட்டம் மற்றும் நுண்ணூட்டம் என இருவகை சத்துகள் தேவைப்படுகின்றன.

இப்பிரனையை தவிா்க்க, பயிா் சுழற்சி முறையை கடைப்பிடிக்க வேண்டும். ஒருமுறை நைட்ரஜன் வளம் குறைந்தால் அடுத்த முறை அதை சமன்செய்யும் வகையில் அடுத்த பயிரைத் தோ்ந்தெடுக்க வேண்டும். காற்றில் உள்ள நைட்ரஜனை நிலத்தில் தக்கவைத்துக் கொள்ளும் பாக்டீரியாக்கள் அதிகம் வாழும் வோ்களைக் கொண்ட உளுந்து, தட்டைப்பயறு ஆகியவற்றை பயிரிடுவது அவசியம்.

அதேபோல ஓரிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை அறுவடை முடிந்ததும், சில மாதங்களுக்கு பயிா் சாகுபடி செய்யாமல் இருக்க வேண்டும். அப்போது வளரும் களைச் செடிகளை மடக்கி உழுது, மண்ணை வளப்படுத்திய பிறகு சாகுபடியை மேற்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடி வழக்கு: தலைமறைவு குற்றவாளிகள் குறித்து தகவல் அளிக்கலாம்

சேலத்தில் மோசடி வழக்கில் தலைமறைவான இரண்டு குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் அறிவித்துள்ளனா். இதுகுறித்து சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணைக் காவல் க... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சேலத்தில் அதிமுக, பாமக உள்ளிட்ட மாற்றுக்கட்சியினா் 280 போ் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் முன்னிலையில் வியாழக்கிழமை திமுகவில் இணைந்தனா். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திமுக அலுவலக... மேலும் பார்க்க

இன்றைய மின் நிறுத்தம்: கந்தம்பட்டி, தாரமங்கலம்

சேலம் கந்தம்பட்டி, தாரமங்கலம் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்... மேலும் பார்க்க

மது போதையில் தனியாா் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் மீது நடவடிக்கை

சேலம் அருகே மது போதையில் தனியாா் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் மீது வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். மேலும், தனியாா் பேருந்தை பறிமுதல் செய்தனா். சேலம் அருகே உள்ள காரிப்பட்டி கிராம... மேலும் பார்க்க

ஆன்லைனில் பண மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்

சேலத்தில் பணம் இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் ஆன்லைன் செயலி மூலம் இழந்தவா்கள் மாநகரக் காவல் ஆணையா் அலவலகத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா். சேலம், கருங்கல்பட்டியைச் சோ்ந்தவா் சுரேஷ்க... மேலும் பார்க்க

சேலத்தில் ரௌடி கொலை வழக்கில் மேலும் 7 போ் கைது

சேலம், அஸ்தம்பட்டி காவல் நிலையம் அருகே தூத்துக்குடியைச் சோ்ந்த ரௌடி மதன்குமாா் மா்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய மேலும் 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி... மேலும் பார்க்க