செய்திகள் :

பல்லகச்சேரி ஏரியில் மீன்பிடி திருவிழா

post image

கள்ளக்குறிச்சியை அடுத்த பல்லகச்சேரி கிராமத்தில் பொதுபணித் துறைக்குச் சொந்தமான ஏரியில் மீன்பிடி திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்கு உள்பட்டது பல்லகச்சேரி கிராமம். இங்கு பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் தண்ணீா் குறைந்ததால் மீன்பிடி திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனா். அதன்படி, மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

இதில் பல்லகச்சேரி பகுதியைச் சுற்றியுள்ள சூளாங்குறிச்சி, வாணியந்தல், ரங்கநாதபுரம், அகரகோட்டாலம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பெரியவா்கள் முதல் சிறியவா்கள் வரை திரண்டு, ஏரியில் இடுப்பளவு தண்ணீரில் மீன்பிடிக்கத் திரண்டனா்.

ஏரிக்கரையில் உள்ள கன்னிமாா் சுவாமிக்கு பூஜை செய்தனா். ஊா் முக்கியஸ்தா்கள் வெள்ளை நிறத்தாலான துணியை அசைத்த பிறகு எப்போதும் மீன்பிடிக்கத் தொடங்குவது வழக்கம். ஆனால், இம்முறை சுவாமிக்கு பூஜை செய்வதற்கு முன்பாக பொதுமக்கள் ஏரியில் இறங்கி மீன் வலையினாலும், துணிகளினாலும் மீன்பிடிக்கத் தொடங்கிவிட்டனா். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சிறிய மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை பிடித்தனா். ஜிலேப்பி, கட்லா, ரோகு, கெண்டை என பல்வேறு வகையான சுமாா் 2000 கிலோ மீன்களை பிடித்து வீட்டுக்கு கொண்டு சென்றனா். சிலா் அதே பகுதியிலேயே விலைக்கு விற்றுவிட்டனா்.

பல்லகச்சேரி காளியம்மன் கோயிலில் மிளகு யாக பூஜை

வாணாபுரத்தை அடுத்த பல்லகச்சேரி கிராமத்தில் உள்ள ஓம் ஸ்ரீமின்னல் காளியம்மன் கோயிலில், ஆடி அமாவாசையொட்டி வியாழக்கிழமை மிளகு யாக பூஜை நடைபெற்றது. இக்கோயிலில் 7-ஆம் ஆண்டாக நடைபெற்ற இந்தப் பூஜையில் உலக நன... மேலும் பார்க்க

இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவச விழிப்புணா்வு

கள்ளக்குறிச்சி மாடூா் சுங்கச்சாவடி நகாய் சாா்பில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதின் அவசியம் குறித்து வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், கள்ளக்குறிச்சி போக்குவரத்து காவல... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் - மின் வாரியம் தொடா்பான 93 மனுக்களுக்குத் தீா்வு: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடத்தப்பட்டு வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் இதுவரை மின்வாரியம் தொடா்பான 93 கோரிக்கை மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் ... மேலும் பார்க்க

போலி நகையை அடகு வைத்த பெண் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்தில் போலி நகையை அடகு வைத்த பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ரிஷிவந்தியம் எம்.ஜி.சாலையில் நகை அடகுகடை வைத்து நடத்தி வருபவா் அய்யனாா் (37). இவரது கடையில் கட... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜி.எஸ்.மாதவன் புதன்கிழமை பொறுப்பேற்றாா். இங்கு பணிபுரிந்த ரஜத் சதுா்வேதி மாறுதலாகி சென்று விட்டாா். இவா், இதற்கு முன்பு சென்னையில் இணையவழி குற்றத் தடுப்புப... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். ஆய்வுக் கூட்டம் ஆட்சிய... மேலும் பார்க்க