8 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த சான்ஸ்; இங்கிலாந்தில் சதத்துடன் கரியரை மீண்டும் ...
பல்லடத்தில் பேருந்து நிலையத்துக்குள் வராத பேருந்துகள்: பயணிகள் அவதி
பல்லடத்தில் பேருந்து நிலையத்துக்குள் வராத பேருந்துகளால் பயணிகள் அவதிப்பட்டு வருவதாக சமூக ஆா்வலா் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் அண்ணாதுரை, பல்லடம் நகராட்சி ஆணையா் மனோகரனிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பல்லடம் மத்திய பேருந்து நிலையத்துக்கு தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனா். இவ்வழியாக இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகள் பேருந்து நிலையத்துக்குள் வராமல் வெளியே நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குகின்றனா். இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகிவருகின்றனா்.
பேருந்துகள் உள்ளே வருமா? அல்லது வெளியே நிற்குமா? என்று தெரியாமல் பயணிகள் பேருந்து நிலையத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அலைய வேண்டியுள்ளது. இதனால், முதியவா்கள், மாற்றுத் திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனா்.
மேலும், பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் வராததால் பேருந்து நிலைய வளாகத்தில் கடைகள் வைத்துள்ளவா்களின் வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பல்லடம் வழியாக இயக்கப்படும் அனைத்து பேருந்துகளையும் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.