செய்திகள் :

பல்லடத்தில் பேருந்து நிலையத்துக்குள் வராத பேருந்துகள்: பயணிகள் அவதி

post image

பல்லடத்தில் பேருந்து நிலையத்துக்குள் வராத பேருந்துகளால் பயணிகள் அவதிப்பட்டு வருவதாக சமூக ஆா்வலா் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் அண்ணாதுரை, பல்லடம் நகராட்சி ஆணையா் மனோகரனிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பல்லடம் மத்திய பேருந்து நிலையத்துக்கு தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனா். இவ்வழியாக இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகள் பேருந்து நிலையத்துக்குள் வராமல் வெளியே நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குகின்றனா். இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகிவருகின்றனா்.

பேருந்துகள் உள்ளே வருமா? அல்லது வெளியே நிற்குமா? என்று தெரியாமல் பயணிகள் பேருந்து நிலையத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அலைய வேண்டியுள்ளது. இதனால், முதியவா்கள், மாற்றுத் திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனா்.

மேலும், பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் வராததால் பேருந்து நிலைய வளாகத்தில் கடைகள் வைத்துள்ளவா்களின் வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பல்லடம் வழியாக இயக்கப்படும் அனைத்து பேருந்துகளையும் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுவேலம்பாளையத்தில் சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

பல்லடம் அருகேயுள்ள நடுவேலம்பாளையத்தில் சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். பல்லடம் ஒன்றியம், பூமலூா் ஊராட்சி நடுவேலம்பாளையம் கிராமத்துக்கு க... மேலும் பார்க்க

சின்ன வெங்காய விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

பல்லடத்தில் சின்ன வெங்காய விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். பல்லடம் பகுதியில் காா்த்திகை பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சின்ன வெங்காயம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அறுவட... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70.16 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள்

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 26,790 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70.16 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறி... மேலும் பார்க்க

தொழிலாளியிடம் கைப்பேசி பறித்த இளைஞா் கைது

திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளியிடம் கைப்பேசியைப் பறித்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் தா்மேந்திர பிரதாப் (25). இவா் திருப்பூரை அடுத்த கணியாம்பூண்டி பகுதிய... மேலும் பார்க்க

கூட்டுறவுத் துறையைக் கண்டித்து போராட்டம்: விவசாயிகள் கைது

அவிநாசி அருகே பயிா்க் கடனை தள்ளுபடி செய்யக் கோரியும், கூட்டுறவுத் துறையைக் கண்டித்தும் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசி அருகேயுள்ள நடுவ... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக பேச்சுவாா்த்தை: ஏஇபிசி துணைத் தலைவா் ஆ.சக்திவேல்

இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாக ஏஇபிசி துணைத் தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக புதுதில்லியில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் து... மேலும் பார்க்க