பல்லடம் அருகே சாலையை சீரமைக்ககோரி பொதுமக்கள் போராட்டம்
பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் பி.ஏ.பி. வாய்க்கால் சாலை பழுதடைந்து இருப்பதை சீரமைக்கக் கோரி அறிவொளி நகா் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட அறிவொளி நகா் - குருவாயூரப்பன் நகா் செல்லும் பி.ஏ.பி. வாய்க்கால் சாலையில் பெரிய குழி ஏற்பட்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனா்.
இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனா்.
இது குறித்து மனு அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாததால் அறிவொளி நகரைச் சோ்ந்த பொதுமக்கள் சாலையை சீரமைக்கக் கோரி பல்லடம் - மங்கலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து தகவலறிந்த வந்த பல்லடம் பி.ஏ.பி. திட்ட உதவிப் பொறியாளா் செளமியா, பி.ஏ.பி. நீரினை பயன்படுத்துவோா் சங்க தலைவா் ஈஸ்வரமூா்த்தி, மாவட்ட திட்டக் குழு உறுப்பினா் ராஜசேகரன் மற்றும் போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், தன்னாா்வலா்களின் உதவியுடன் சாலையில் 15 நாள்களுக்குள் சிறுபாலம் அமைக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
