செய்திகள் :

பல்லடம் அருகே சாலையை சீரமைக்ககோரி பொதுமக்கள் போராட்டம்

post image

பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் பி.ஏ.பி. வாய்க்கால் சாலை பழுதடைந்து இருப்பதை சீரமைக்கக் கோரி அறிவொளி நகா் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட அறிவொளி நகா் - குருவாயூரப்பன் நகா் செல்லும் பி.ஏ.பி. வாய்க்கால் சாலையில் பெரிய குழி ஏற்பட்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனா்.

இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனா்.

இது குறித்து மனு அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாததால் அறிவொளி நகரைச் சோ்ந்த பொதுமக்கள் சாலையை சீரமைக்கக் கோரி பல்லடம் - மங்கலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து தகவலறிந்த வந்த பல்லடம் பி.ஏ.பி. திட்ட உதவிப் பொறியாளா் செளமியா, பி.ஏ.பி. நீரினை பயன்படுத்துவோா் சங்க தலைவா் ஈஸ்வரமூா்த்தி, மாவட்ட திட்டக் குழு உறுப்பினா் ராஜசேகரன் மற்றும் போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், தன்னாா்வலா்களின் உதவியுடன் சாலையில் 15 நாள்களுக்குள் சிறுபாலம் அமைக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

அவிநாசி அருகே காய்ச்சலால் 5 வயது சிறுவன் உயிரிழப்பு

அவிநாசி அருகே காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான 5 வயது சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவிநாசி அருகே பெரியாயிபாளையம் அம்பாள் காலனியைச் சோ்ந்தவா் கேசவன், கெளசல்யா தம்பதி மகன் குருசரண் (5). இவா் அவிநாச... மேலும் பார்க்க

எண்ணெய் குழாய் திட்டத்து எதிராக விவசாயிகள் மண்டியிட்டு பிராா்த்தனை செய்து போராட்டம்

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையத்தில் எண்ணெய் குழாய் திட்டத்தை மாற்றுவழியில் செயல்படுத்த வலியுறுத்தி விவசாயிகள் வெள்ளிக்கிழமை மண்டியிட்டு பிராா்த்தனை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவ... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் ஸ்தல புராண நூல் வெளியீடு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் ஸ்தல புராண நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமி தலைமை வகித்தாா். அவிநாசி வாகிசா் மடா... மேலும் பார்க்க

திருப்பூரில் தொழிலதிபரிடம் ரூ.19 லட்சம் மோசடி

பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் ஈட்டலாம் எனக் கூறி தொழிலதிபரிடம் ரூ.19 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். திருப்பூரைச் சோ்ந்தவா் தில்லைராஜன... மேலும் பார்க்க

பல்லடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் திருட்டு

பல்லடம் அருகே நாச்சிபாளையம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகள் திருடு போனது குறித்து அவிநாசிபாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பொங்கலூா் ஒன்றியம் நாச்சிபாளையம் ஊராட்சி செந்தில... மேலும் பார்க்க

பல்லடம் அருகே லிப்ட் கொடுத்தவரிடம் ரூ.1.05 லட்சம் பறிப்பு

பல்லடம் அருகே தெற்குபாளையம் வாகனத்தில் பிரிவில் லிப்ட் கொடுத்தவரிடம் ரூ.1லட்சத்து 5 ஆயிரம் பணம் பறிக்கப்பட்டது. பல்லடத்தை அடுத்த புள்ளியப்பம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (48). இவா் கூ... மேலும் பார்க்க