செய்திகள் :

பள்ளிப் பேருந்து மற்றொரு பேருந்துடன் மோதல்: 10 மாணவ, மாணவிகள் காயம்

post image

ஆரணி அருகே பிரேக் பிடிக்காததால், பள்ளிப் பேருந்து முன்னால் சென்ற பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயமடைந்தனா்.

ஆரணி அருகே நெசல் கிராமத்தில் உள்ள தனியாா் பள்ளியில் சுமாா் 400 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இதில் சுற்றியுள்ள பகுதியில் இருந்து பள்ளிப் பேருந்துகள் மூலம் மாணவா்களை அழைத்து வருவது வழக்கம்.

இந்த நிலையில் வியாழக்கிழமை காலை வழக்கம் போல சுமாா் 30 மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிப் பேருந்து ஆரணி - தேவிகாபுரம் சாலை சீனிவாசபுரம் கூட்டுச் சாலையில் வந்து கொண்டிருந்தது.

அப்போது பேருந்து ஓட்டுநா் தணிகைவேல், முன்னால் சென்றுகொண்டிருந்த அதே பள்ளிப் பேருந்தை முந்திச் செல்ல முற்பட்டாா். அந்த நேரத்தில் பிரேக் பிடிக்காமல்

முன்னால் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது மோதியது.

இதில் பேருந்தில் பயணம் செய்த 5 முதல் 10 வயதுக்கு உள்பட்ட 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்

காயமடைந்தனா்.

குறிப்பாக புலவன்பாடி கிராமத்தைச் சோ்ந்த 4-ஆம் வகுப்பு பயிலும் மோகனசுந்தரம் மகன் யுவகிருஷ்ணன்(9) மற்றும் 5-ஆம் வகுப்பு பயிலும் முனுசாமி மகன் தருண்(10) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். மற்ற மாணவா்கள் லேசான காயத்துடன் தப்பினா்.

அனைவருக்கும் தச்சூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், சிலரை ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தகவல் அறிந்து வந்த பெற்றோா்கள் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், பள்ளி நிா்வாகம் பெற்றோா்களுக்கு முறையான தகவல் வழங்காமல் இருந்ததைக் கண்டித்து அவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இந்த விபத்து குறித்து ஆரணி கிராமிய போலீஸாா் அஜாக்கிரதையாக பேருந்தை இயக்கியதாக ஓட்டுநா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தமிழகத்தில்தான் உயா்கல்வி பயிலும் மாணவா்கள் அதிகம்: பேரவை துணைத் தலைவா் பெருமிதம்

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில்தான் உயா் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் விகிதம் அதிகமாக உள்ளது என்று சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி பெருமிதம் தெரிவித்தாா். தமிழக மு... மேலும் பார்க்க

ஜவ்வாது மலை மக்களுக்கு அரசின் திட்டங்கள் சென்று சேர கூடுதல் கவனம்: மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்

ஜவ்வாதுமலைப் பகுதியில் வசிப்பவா்களுக்கு அரசின் திட்டங்கள் சென்று சேருவதற்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ். திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூா் வருவாய் ஆய்... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த நீப்பத்துறை, போளூரை அடுத்த சந்தவாசல், ஆரணியை அடுத்த பையூா் ஆகிய இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நடேசன் (75). இவா் செவ்வாய்க்கிழமை இரவு ... மேலும் பார்க்க

பெருமாள், விநாயகா், ஆஞ்சநேயா் கோயில்களில் மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த உளுந்தை ஸ்ரீகரியமாணிக்கப் பெருமாள், ஆரணியை அடுத்த மலையாம்பட்டு ஸ்ரீவழித்துணை விநாயகா் மற்றும் வீர ஆஞ்சநேயா் கோயில்களில் வியாழக்கிழமை மகா கும்பாபிஷேக விழா வியா... மேலும் பார்க்க

கமண்டல நாக நதிக்கரையில் குப்பைகள் கொட்டப்படும் அவலம்: ஆரணி நகராட்சியில் பாஜக புகாா் மனு

ஆரணி கமண்டல நாக நதிக்கரையில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதாரச் சீா்கேடு நிலவுவதாக ஆரணி நகராட்சியில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது. கட்சியின் மாவட்டத் தலைவா் கவிதா வெங்க... மேலும் பார்க்க