செய்திகள் :

பழனியில் நெகிழி பயன்பாடு விவகாரம்: சுற்றுச்சூழல் செயலா் பதிலளிக்க உத்தரவு

post image

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தப்படுவது தொடா்பாக தமிழக சுற்றுச்சூழல், வனத் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

பழனியைச் சோ்ந்த புருஷோத்தமன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஏராளமான பக்தா்கள் நாள்தோறும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா்.

பழனி, அதைச் சுற்றியுள்ள கடைகளில் நெகிழியால் தயாரிக்கப்பட்ட பைகள், டம்ளா்கள், தட்டுகள், கரண்டிகள் போன்ற அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், இந்தப் பகுதியின் சுற்றுச்சூழல் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. தமிழக சுற்றுச்சூழல், வனத் துறை சாா்பில் நெகிழிப் பொருள்கள் உற்பத்தி, பயன்பாட்டுக்குத் தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. எனினும், நெகிழிப் பொருள்கள் உற்பத்தியோ, பயன்பாடோ இன்னும் குறையவில்லை.

இதுதொடா்பாக நடவடிக்கை கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தமிழக சுற்றுச்சூழல், வனத் துறையால் பிறப்பிக்கப்பட்ட நெகிழிப் பொருள்கள் உற்பத்தி, பயன்பாட்டுக்குத் தடை தொடா்பான அரசாணையை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். நெகிழிப் பொருள்களை விற்பனை செய்வோா், பயன்படுத்துவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கு தொடா்பாக தமிழக சுற்றுச்சூழல், வனத் துறைச் செயலா், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சுற்றுச்சூழல் பொறியாளா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

அரசு மருத்துவமனைகளில் மருத்துவா் காலிப் பணியிடங்கள்: முதன்மைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவா் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில், மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச... மேலும் பார்க்க

உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம்

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், ஏ.பி.டி. துரைராஜ் மேல்நிலைப் பள்ளி சாா்பில் தமிழ்ச் சங்க பெருந்திட்ட வளாகக் கூட்டரங்கத்தில் சிறப்பு தமிழ்க் கூடல் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நூலக முன்னோடி வே. த... மேலும் பார்க்க

பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

மதுரை கோ. புதூா் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் மாநகரப் போக்குவரத்துக் காவல் துறை சாா்பில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் ... மேலும் பார்க்க

குடியிருப்புக்கு ஆட்சியரின் பெயரைச் சூட்டிய திருநங்கைகள்!

விருதுநகா் மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தங்களுக்கு வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி செலுத்தும் வகையில், தங்கள் குடியிருப்புப் பகுதிக்கு மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு நிதியுதவி

மதுரை, ஜூன் 13: உடல்நலக் குறைவால் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு சக காவலா்களின் பங்களிப்பு நிதியுதவியை, மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே.அரவிந்த் வியாழக்கிழமை வழங்கினாா். மதுரை மாவட்ட... மேலும் பார்க்க

கணவா் இறந்த சோகம்: மனைவி தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை கோ.புதூா் டி.ஆா்.ஓ. குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த வீரமணி மகள் ஜெயஸ்ரீ (20). இவா், செல்லூா் பகுதியைச் சோ்ந்த கோபிநாத்தை காதலி... மேலும் பார்க்க