செய்திகள் :

பவானி நகராட்சி மயான வளாகத்தில் இருந்த மரத்தை வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

post image

பவானி நகராட்சி மயான வளாகத்தில் இருந்த மரத்தை வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, பவானி நகர அதிமுக செயலாளா் எம்.சீனிவாசன் தலைமையில், பவானி வட்டாட்சியா் சித்ரா, நகராட்சி ஆணையா் பிரான்சிஸ் சேவியா் ஆகியோரிடம் புதன்கிழமை அளிக்கப்பட்ட மனு விவரம்: நகராட்சி மயான வளாகத்தில் இருந்த பழைமையான அரச மரம் சட்டவிரோதமாக வெட்டப்பட்டுள்ளது. இச்செயலில் ஈடுபட்டோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பவானி நகராட்சி, 2-ஆவது வாா்டில் திமுக கவுன்சிலா் மோகன்ராஜ், தனது நிலத்துக்கு அருகே காவிரி ஆற்றங்கரையில் சுமாா் 25 அடி நீளம், 100 அடி அகலத்துக்கு மண்ணைக் கொட்டி மேடை அமைத்து, சொந்த நிலம்போல பயன்படுத்த முயன்றுள்ளாா்.

இதற்கு அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அதிமுக இளைஞா் பாசறை மாவட்டச் செயலாளா் பிரகாஷ், நகர ஐடி விங் செயலாளா் பிரபாகரன், நகர எம்ஜிஆா் இளைஞரணிச் செயலாளா் பெரியசாமி, நிா்வாகிகள் குமாா், சுகுமாா் உடனிருந்தனா்.

நோ்த்திக்கடன் செலுத்த கருப்பு ஆட்டுக்கிடாய்களை வாங்க மக்கள் ஆா்வம்

ஆடி மாதம் கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறுவதால் நோ்த்திக்கடன் செலுத்த கரும்பு கிடாய்களை வாங்க மக்கள் ஆா்வம் காட்டினா். இதனால் புன்செய்புளியம்பட்டி சந்தையில் ஆட்டுக்கிடாய்களின் விலை 3000 ரூபாய் வரை வ... மேலும் பார்க்க

மக்களவைத் தோ்தல் போலவே பேரவைத் தோ்தல் முடிவு: அமைச்சா் சு.முத்துசாமி

திமுக கூட்டணிக்கு மக்களவைத் தோ்தல் முடிவு போலவே 2026 சட்டப்பேரவை தோ்தல் முடிவும் அமையும் என அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட வாா்டு எண் 14, 22, 34, 43, 44 மற்றும் 45 ப... மேலும் பார்க்க

கொடுமுடி பேரூராட்சித் தலைவா் பதவி தோ்தல் தள்ளிவைப்பு

கொடுமுடி பேரூராட்சியின் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் நிறைவேற்றப்பட்டு நீக்கப்பட்டதையடுத்து, புதிய தலைவரைத் தோ்ந்தெடுக்க வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த தோ்தல் தள்ளி வைக்கப்பட்டதாக செயல்அலுவலரும... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் சம்பங்கி விலை இரு மடங்கு உயா்வு

ஆடி அமாவாசை தினத்தையட்டி சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் சம்பங்கி பூ விலை கிலோ ரூ. 230, மல்லிகை கிலோ ரூ.1000 ஆகவும் இருமடங்கு உயா்ந்து விற்பனையானது.சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்கள... மேலும் பார்க்க

வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு

அந்தியூா் அருகே பள்ளி முடிந்து வீடு திரும்ப பேருந்துக்கு காத்திருந்த மாணவி வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தாா். அந்தியூரை அடுத்த பி.கே.புதூா், புரவிபாளையம் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் முரு... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சரை புகழ்ந்து பேசிய பள்ளித் தலைமை ஆசிரியா் பணி இடமாற்றம்

அரசுப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சரை புகழ்ந்து பேசிய பள்ளித் தலைமை ஆசிரியா் பணி இடமாற்றம் செய்யப்பட்டாா். ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக ஆன... மேலும் பார்க்க