செய்திகள் :

பாமக தலைவர் அன்புமணி; உள்கட்சித் தேர்தல்: பொதுக் குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றம்!

post image

மாமல்லபுரம்: அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை பாமக தலைவராக அன்புமணி நீடிப்பார், பாமகவில் உள்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள், அன்புமணி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.

பாமக தலைவர் அன்புமணி தலைமையில, பொதுக் குழுக் கூட்டம் மாமல்லபுரத்தில் இன்று தொடங்கியது.

திமுக அரசை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வீழ்த்த பாட்டாளி மக்கள் கட்சி உறுதியேற்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மனங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பாட்டாளி மக்கள் கட்சியின் உள்கட்சி தேர்தல்களை நடத்த ஓராண்டு அவகாசம் அளிக்கப்படும். அதுவரை தலைவராக அன்புமணி, பொதுச் செயலாளராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா ஆகியோர் 2026 ஆகஸ்ட் வரை பதவியில் நீடிப்பார்கள்

பாட்டாளி மக்கள் கட்சியின் விதிப்படி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்கட்சித் தேர்தலை நடத்த வேண்டும்.

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை அறிவிக்காவிட்டால் அரசைக் கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தவேண்டும்; விடுதலை நாள் அறிவிப்பாக தமிழக அரசு வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும், சமூகநீதி கடமைகளை நிறைவேற்ற மறுக்கும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம்.

அரசுத் துறைகளில் காலி இடங்களை நிரப்பி, 6.5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும், 19 : சிங்கள கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை: தொல். திருமாவளவன்

ஆணவக் கொலைகளைத் தடுக்க தமிழக அரசு தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினாா். தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த மென்பொறியாளா் கவின் கொலையைக்... மேலும் பார்க்க

திமுக இலக்கிய அணித் தலைவராக அன்வர் ராஜா நியமனம்

திமுக இலக்கிய அணித் தலைவராக முன்னாள் அமைச்சா் அ.அன்வா் ராஜா நியமக்கப்பட்டுள்ளாா். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் சனிக்கிழமை வெளியிட்டாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: முன... மேலும் பார்க்க

மாநிலக் கல்விக் கொள்கை தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும்: இரா.முத்தரசன்

மாநிலக் கல்விக் கொள்கை, தன்னம்பிக்கை மற்றும் சுய திறனை ஊக்குவிக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் மநிலச் செயலா் இரா.முத்தரசன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் மாநிலக்... மேலும் பார்க்க

'தமிழ்நாடு மீனவர்கள் சிறைவாசத்தின் அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்'

தமிழ்நாடு மீனவர்கள் சிறைவாசத்தின் அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில் இலங்கை கடற்படையினரால் இன்ற... மேலும் பார்க்க

கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(9.8.2025) செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில... மேலும் பார்க்க

அகல் விளக்கு திட்டத்தை தொடங்கிவைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!

புதுகோட்டையில் அகல் விளக்கு திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, ‘‘9 ம... மேலும் பார்க்க