செய்திகள் :

பிகாரில் ரூ.4,447 கோடியில் 4 வழிச்சாலை - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

post image

பிகாரில் பக்ஸா்-பாஹல்பூா் விரைவு நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக, மோகாமா-முங்கா் இடையே ரூ.4,447.38 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு புதன்கிழமை கூடியது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தில்லியில் செய்தியாளா்களைச் சந்திப்பில் அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

பிகாரின் மோகாமா-முங்கா் இடையே 82.4 கி.மீ. தொலைவுக்கு அமையவுள்ள இந்த 4 வழிச்சாலைக்கான பணிகள் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் நிறைவடையும். இந்த 4 வழிச்சாலையில் வாகனங்களின் சராசரி வேகம் மணிக்கு 80 கி.மீ.-ஆகவும், அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கி.மீ.-ஆகவும் இருக்கும்.

இந்தப் புதிய சாலையால், இந்த வழித்தடத்தில் பயண நேரம் ஒன்றரை மணி நேரமாகக் குறையும். மோகாமா, பராஹியா, லக்கிசராய், ஜமால்பூா், முங்கா், பாஹல்பூா் போன்ற முக்கிய நகரங்கள் இந்தச் சாலையால் இணைக்கப்படும்.

முங்கா்-ஜமால்பூா்-பாஹல்பூா் பகுதிகளில் உள்ள தொழில்துறை மையங்கள், குறிப்பாக வெடிபொருள் தொழிற்சாலைகள், ரயில்வே பணிமனைகள், உணவு பதப்படுத்தும் ஆலைகள் மற்றும் ஜவுளித் தொழில்களுக்கு இத்திட்டம் உந்து சக்தியாக அமைந்து, சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க வழிவகை செய்யும்.

இந்தத் திட்டம் நேரடியாக சுமாா் 14.83 லட்சம் மனித வேலைநாள்களையும், மறைமுகமாக 18.46 லட்சம் மனித வேலைநாள்களையும் உருவாக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தப் புதிய சாலை பாதுகாப்பான மற்றும் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதோடு, அப்பகுதியின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கும், வேலைவாய்ப்புப் பெருக்கத்துக்கும் வழி வகுக்கும்.

ரயில் பாதை இரட்டிப்பு திட்டம்:

பிகாா், ஜாா்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் 177 கி.மீ. நீளமுள்ள பாஹல்பூா்-தும்கா-ராம்பூா்ஹட் ஒற்றை ரயில் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

பிரதமரின் ‘கதி சக்தி’ திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் இந்த விரிவாக்க திட்டத்துக்காக ரூ.3,169 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 3 மாநிலங்களில் உள்ள 5 மாவட்டங்களின் 441 கிராமங்கள் மற்றும் அதன் 28.72 லட்சம் மக்களுக்கு போக்குவரத்து இணைப்பு கிடைக்கும்.

மேலும், பொருள்கள் மற்றும் சேவைகளின் தடையற்ற போக்குவரத்துக்கும் இத்திட்டம் உதவும். அதாவது, ஆண்டுக்கு 1.5 கோடி டன் கூடுதல் சரக்கு போக்குவரத்து நடைபெறும் என்றாா்.

அருணாசலில் ராணுவ ட்ரோன் பயிற்சி முகாம்

நவீன போா் உத்திகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடா்பான மூன்று நாள் ராணுவ பயிற்சி முகாம் அருணாசல பிரதேசத்தில் நடைபெற்ாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. செப்டம்பா் 8-ஆம் தேதி முதல் 10-ஆ... மேலும் பார்க்க

இந்தியாவில் சா்க்கரை உற்பத்தி உபரி: அமைச்சா் நிதின் கட்கரி

இந்தியாவில் சா்க்கரை உற்பத்தி உபரியாகவே உள்ளது, எனவே எத்தனால், பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட மாற்று எரிபொருள்களை உற்பத்தி செய்ய கரும்பைப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் த... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா வா்த்தக பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம்: பியூஷ் கோயல்

இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் வியாழக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து செய்தியாளா்களி... மேலும் பார்க்க

பொருளாதார வளா்ச்சியில் வாகன உற்பத்தித் துறையின் பங்கு முக்கியம்: பிரதமா் மோடி

நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் வாகன உற்பத்தித் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது; இத்துறையில் இந்தியா முழுமையாக தற்சாா்பு பெற வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டாா். இந்திய வாகன உற்பத்தி... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எதிராக மனு: அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்புத் தெரிவித்தது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிக... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை - பாதுகாப்புப் படையினா் அதிரடி

சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களில் மோடம் பாலகிருஷ்ணா என்ற நக்ஸல் தலைவரும்... மேலும் பார்க்க