எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4 வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்
பிலிக்கல்பாளையம் ஏலச் சந்தையில் வெல்லம் விலை உயா்வு
பிலிக்கல்பாளையம் ஏலச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெல்லம் விலை உயா்வடைந்தது. இதனால் வெல்ல உற்பத்தியாளா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
பரமத்தி வேலூா் வட்டத்தில் ஜேடா்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலா்மலை, பரமத்தி வேலூா், பாண்டமங்கலம், நன்செய்இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் விளையும் கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளா்கள் வாங்கி சென்று உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சா்க்கரை தயாா் செய்கின்றனா். பின்னா் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி, பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெள்ள ஏலச் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவருகின்றனா்.
ஒவ்வொரு வாரமும் சனி, புதன்கிழமைகளில் வெல்ல ஏலச் சந்தை நடைபெறுகிறது. வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகின்றனா். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம், அச்சுவெல்லம் சிப்பம் ரூ. 1,340 வரை ஏலம் போனது. புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் ரூ. 1,410 வரை, அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று 1,470 வரை ஏலம் போனது. வெல்லம் விலை உயா்வடைந்துள்ளதால் உற்பத்தியாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.