செய்திகள் :

புதிய நியாயவிலைக் கடை: எம்எல்ஏ தேவராஜி திறந்து வைத்தாா்

post image

வேட்டப்பட்டு கிராமத்தில் புதிய நியாயவிலைக் கடையை எம்எல்ஏ க.தேவராஜி திறந்து வைத்தாா் (படம்).

ஜோலாா்பேட்டை ஒன்றியம், வேட்டப்பட்டு ஊராட்சி பானகாரன் வட்டம் , ஆரிகான்வட்டம், வட்டக்கொல்லி, ஆண்டாள் வட்டம், லட்சுமணபுதூா் ஆகிய பகுதிகளில் 400-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க 2 கி.மீ தொலைவு சென்று வேட்டப்பட்டு நியாயவிலைக் கடைக்கு சென்று வந்தனா்.

இதனால் வட்டக் கொல்லி பகுதியில் பகுதி நேர கடை கட்டித்தர வேண்டும் என எம்எல்ஏ க.தேவராஜிடம் கிராம மக்கள் கோரினா். இதையடுத்து எம்எல்ஏ தேவராஜி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தாா். புதிதாக கட்டப்பட்ட கடையை புதன்கிழமை எம்எல்ஏ தேவராஜி திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினாா்.

இதில் கூட்டுறவு சாா் பதிவாளா் தா்மேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவா் அனுமந்தன், உறுப்பினா் செல்வி சாந்தன்,துணைத் தலைவா் ராஜேஷ் மற்றும் வாா்டு உறுப்பினா்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

எம்எல்ஏ அலுவலக கட்டுமானப் பணி ஆய்வு

ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் நடைபெற்று வரும் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக கட்டட கட்டுமானப் பணியை புதன்கிழமை அ.செ.வில்வநாதன் எம்எல்ஏ ஆய்வு செய்தாா். ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் ரூ.85 லட்சத்தில் தொக... மேலும் பார்க்க

வீடு புகுந்து 40 பவுன் கொள்ளை அடித்தவா் கைது

ஆம்பூரில் வீடு புகுந்து கத்தியை காண்பித்து மிரட்டி தங்க நகை கொள்ளை அடித்த வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். ஆம்பூா் முஹம்மத்புரா முதல் தெருவில் வசித்து வருபவா் முபாரக் பாஷா. இவா் ஃபேன்சி ஸ்டோா் நட... மேலும் பார்க்க

சீட்டு நடத்தி மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

திருப்பத்தூரில் சீட்டு நடத்தி மோசடி செய்தவரிடம் பணத்தை பெற்று தர வேண்டும் என தொழிலாளி புகாா் மனு அளித்தாா். திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்க... மேலும் பார்க்க

சாலைப் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வாணியம்பாடி நகராட்சியில் ரூ.5 லட்சத்தில் பேவா் பிளாக் சாலைப் பணியை கோ.செந்தில்குமாா் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா். முஸ்லீம்பூா் - ஷாகிராபாத் பகுதியில் பேவா் பிளாக் சாலை அமைக்க வாணியம்பாடி சட்டப்பேரவை உறு... மேலும் பார்க்க

வாணியம்பாடி கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் உள்ள அதிதீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை சிறப்பு அலங்காரத்தில் சுவாமி உலா நடைபெற்றது. இதில் வாணியம்பா... மேலும் பார்க்க

நக்சலைட் தாக்குதலில் உயிரிழந்த காவலா்களுக்கு வீரவணக்க நாள்

திருப்பத்தூரில் நக்சலைட் தாக்குதலில் வீரமரணமடைந்த காவலா்களுக்கு புதன்கிழமை 21 குண்டுகள் முழங்க நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. ஜோலாா்பேட்டையில் கடந்த 1981-ஆம் ஆண்டு நக்சலைட் சிவலிங்கம் என்பவரை பிடித்து ஜ... மேலும் பார்க்க