விழிப்புணா்வு கண்காணிப்புக்குழு கூட்டம்: செங்கல்சூளை உரிமையாளா்கள் பங்கேற்பு
புதியம்புத்தூா் அருகே ரத்த தான முகாம்
புதியம்புத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்பட்ட மேலமருதூா் கிராமத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
தனியாா் சிமென்ட் நிறுவன உரிமையாளா் பிறந்தநாளை முன்னிட்டு, அந்நிறுவனம் சாா்பில் முகாம் நடைபெற்றது. கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையின் ரத்த வங்கி மருத்துவ அலுவலா் துளசி தலைமையிலான மருத்துவக் குழுவினா் பங்கேற்று, நிறுவனப் பணியாளா்களிடம் ரத்தம் சேகரித்தனா்.
ஏற்பாடுகளை, ஓட்டப்பிடாரம் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் காளிமுத்து, புதியம்புத்தூா் சுகாதார நிலைய ஆய்வாளா்கள் தேவசுந்தரம், சுா்ஜின், ஞானசேகா் ஆகியோா் செய்திருந்தனா்.