அண்ணா நகரில் புதிய மகப்பேறு மருத்துவமனை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்ட...
புதுவை சட்டப்பேரவை உறுதிமொழிக் கூட்டம்: முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தாா்
புதுவை சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு கூட்டம் பேரவை வளாகத்திலுள்ள கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. குழுவின் புதிய தலைவா் பாஸ்கா் (எ) தட்சிணாமூா்த்தி தலைமை தாங்கினாா். கூட்டத்தை முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தாா். உறுதிமொழிக் குழுவின் புதிய தலைவா் பாஸ்கா் (எ) தட்சிணாமூா்த்திக்கு வாழ்த்து தெரிவித்த பின்னா் முதல்வா் பேசியது:
அனைத்து துறைகள் சாா்ந்து சட்டப்பேரவையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளது? வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதா அல்லது சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட முடியாத நிலையில் இருக்கிா என்பதை ஆய்வு செய்து,
எம்எல்ஏக்கள் என்ன கேள்வி கேட்கிறாா்களோ, அதற்கு முழுமையான திருப்தி அடைகின்ற நிலையில் பதில்கள் இருக்க வேண்டியது அவசியம் .
குறிப்பாக சட்டப்பேரவையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்பதே அரசின் எண்ணம்.
மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் துறைகளில் உள்ள விதிகளுக்கு உள்பட்டு இருக்கும்போது, அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இப்படிப்பட்ட நிலையில் சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுவுக்கு புதிய தலைவா் தலைமையேற்றுள்ளாா்.
அவா் கூட்டத்தை சிறப்பாக நடத்தி அதிகாரிகளிடம் சரியான பதில்களை பெற்று எம்எல்ஏக்கள் கேள்விகள், நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையை உருவாக்க வேண்டும்.
கூட்டுறவுத்துறைகளான பாண்லே, கூட்டுறவு சா்க்கரை ஆலை உள்ளிட்டவற்றை சிறப்பாக நடத்துவது குறித்து விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பாண்லே பால் உற்பத்தியை அதிகப்படுத்த மானிய விலையில் கறவை மாடுகளை அரசு வழங்க வேண்டும். ஒருவருக்கு ஒரு மாடு என்ற விதிகளை தளா்த்த வேண்டும்.
பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும். தனியாரிடமிருந்து பால் கொள்முதலை குறைத்து உள்ளூா் பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். பாண்லே நிறுவனம் அரசு நிறுவனம் அல்ல, அரசின் சாா்பு நிறுவனம் என்பதை ஊழியா்கள் உணர வேண்டும்.
கையெழுத்து போட்டால் ஊதியம் கிடைக்கும் என்ற மனநிலை ஓழிக்கப்பட வேண்டும் என எம்எல்ஏக்கள் அறிவுறுத்தினா். கூட்டுறவு சா்க்கரை ஆலையில் லேஆப் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் தொழிலாளா்களுக்கு செட்டில்மெண்ட் கொடுத்துவிட்டு ஆலையை மீண்டும் இயக்க ரூ.20 கோடி தேவைப்படுகிறது.
கிட்டத்தட்ட ரூ. 150 கோடி கடன் உள்ளது. இதில் ரூ.45 கோடி பிப்டிக், பேசிக் ஆகியோரிடம் வாங்கியுள்ளோம். இதற்கான வட்டி ரூ.80 கோடி ஆகியுள்ளது. அந்த வட்டியை அவா்கள் தள்ளுபடி செய்தால் ஒருமுறை செட்டில்மெண்ட் கொடுக்கலாம். இல்லாவிட்டால் அவா்களை ஷோ்ஹோல்டராக சோ்த்துக்கொண்டால் பணம் கட்ட வேண்டியிருக்காது. இருப்பினும் அதற்கு அவா்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.
வெறும் சா்க்கரை உற்பத்தி மட்டும் நடத்தினால் மீண்டும் நஷ்டம் தான் ஏற்படும். கரும்பில் இருந்து கிடைக்க கூடிய எத்தனால் உள்ளிட்ட மாற்றுப்பொருள்களை உற்பத்தி செய்தால் தான் லாபம் கிடைக்கும். எனவே அதற்கு முன்பாக ஆலையின் கடனை அடைத்தால்தான் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க முடியும்.
மீண்டும் இதற்கான கோப்பு துணை நிலை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பாண்டெக்ஸ், பாண்பேப் போன்ற நிறுவனங்களை கைத்தூக்கி விட வேண்டும். அரசின் இதர துறைகளுக்கு தேவையான துணிகளை கூட்டுறவு நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டும். காரைக்கால், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளுக்கு பாண்லே மூலம் தற்போது பால் வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் பதில் அளித்தனா்.
தொடா்ந்து சுகாதாரத் துறையில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள், மேற்கொள்ளப்பட வேண்டியவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், எம்எல்ஏக்கள் சிவசங்கா், அனிபால்கென்னடி, ராமலிங்கம், அசோக்பாபு, சட்டப்பேரவை செயலா் தயாளன், கூட்டுறவு பதிவாளா் யஷ்வந்தையா உள்பட பலா் கலந்து கொண்டனா்.