செய்திகள் :

பூமியில் இரண்டாவது குறுகிய நாள் இன்று; வழக்கத்தை விட வேகமாக சுழலும் பூமி - ஏன் இது நிகழ்கிறது?

post image

பூமி இன்று வழக்கத்தை விட சற்று வேகமாக சுழல்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால், இன்றைய நாள் வழக்கமான 24 மணி நேரத்தை விட 1.34 மில்லி வினாடிகள் குறைவாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

இது 2025ஆம் ஆண்டின் இரண்டாவது குறுகிய நாளாக கருதப்படுகிறது. இதற்கு முன்பு ஜூலை 10 அன்று, பூமி 1.36 மில்லி வினாடிகள் குறைவாக சுழன்று, இந்த ஆண்டின் மிகக் குறுகிய நாளாக பதிவு செய்யப்பட்டது.

பூமியின் சுழற்சி வேகத்தில் ஏற்படும் இந்த சிறிய மாற்றங்கள், பூமியின் உள்ளே நடக்கும் மாற்றங்களைக் குறிக்கின்றன. பூமியின் உள் மையம், கடல் நீரோட்டங்கள், வளிமண்டல மாற்றங்கள் போன்றவை இந்த வேக மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

earth

பூமி ஏன் வேகமாக சுழல்கிறது?

2023ஆம் ஆண்டு Paleoceanography and Paleoclimatology இதழில் வெளியான ஆய்வின்படி, பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் ஒரு நாள் 19 மணி நேரமாக மட்டுமே இருந்தது. சூரியனும் சந்திரனும் பூமியின் கடல்கள் மற்றும் வளிமண்டலத்தின் மீது ஏற்படுத்திய ஈர்ப்பு விசையால் இது நிகழ்ந்தது.

பொதுவாக, சந்திரன் பூமியிலிருந்து மெதுவாக விலகுவதால், பூமியின் சுழற்சி வேகம் குறையும். ஆனால், தற்போது பூமியின் உள் மைய இயக்கங்கள், கடல் நீரோட்டங்கள் மற்றும் வளிமண்டல மாற்றங்கள் பூமியை சற்று வேகமாக சுழல வைக்கின்றன என்று விஞ்ஞானிகள் கணிக்கின்றனர்.

இதனால் என்ன நடக்கும்?

பூமியின் சுழற்சி வேகம் தொடர்ந்து அதிகரித்தால், 2029ஆம் ஆண்டுக்குள் நமது அணு கடிகாரங்களில் ஒரு வினாடியை குறைக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இது நேரக் கணக்கீட்டில் ஒரு முக்கிய மாற்றமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

மற்றொரு குறுகிய நாள் வருமா?

2025ஆம் ஆண்டில் ஜூலை 10, ஜூலை 22 மற்றும் ஆகஸ்ட் 5 ஆகிய நாட்கள் மிகக் குறுகிய நாட்களாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் முன்னறிவித்தனர்.

தற்போதைய தரவுகளின்படி, ஜூலை 10 மிகக் குறுகிய நாளாகவும், இன்று (ஜூலை 22) இரண்டாவது குறுகிய நாளாகவும் இருக்கிறது. இந்த சிறிய மாற்றங்களை நாம் உணர முடியாவிட்டாலும், விஞ்ஞானிகள் இதை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.

முதலை கண்ணீருடன் பொய்யான சோகத்தை ஒப்பிடுவது ஏன் தெரியுமா? - அறிவியல் காரணம் இதான்!

"முதலை கண்ணீர் வடிக்காதே" என்று பலர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் குறித்து பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். முதலைகள் உணவு உண்ணும் போது கண்ணீர் வடிக்கின... மேலும் பார்க்க

Humboldtine: 75 ஆண்டு பழைய கடிதம் மூலம் கண்டறியப்பட்ட அரிய வகை கனிமம்; எப்படித் தெரியுமா?

75 ஆண்டுகள் பழமையான ஒரு கடிதம், அறிவியல் உலகில் புதிய கண்டுபிடிப்புக்கு வழிவகுத்துள்ளது. ஹம்போல்டைன் எனப்படும் அரிய கனிமம் குறித்த ஒரு கடிதம், 2023 ஆம் ஆண்டு பவேரிய சுற்றுச்சூழல் நிறுவனத்தின் திட்டத்த... மேலும் பார்க்க

CO2-ஐ உணவாக மாற்றிய சீன விஞ்ஞானிகள்; உலகைத் திருப்பிப் போடும் அறிவியல் கண்டுபிடிப்பு; பின்னணி என்ன?

சீன ஆராய்ச்சியாளர்கள், மெத்தனாலை வெள்ளை சர்க்கரையாக மாற்றும் புதுமையான முறையைக் கண்டுபிடித்து, கரும்பு அல்லது சர்க்கரை வள்ளி வளர்ப்பதற்கு மாற்றாக ஒரு தீர்வை வழங்கியுள்ளனர்.உயிரி மாற்ற முறையைப் பயன்படு... மேலும் பார்க்க

உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி கண்டுபிடிப்பு: கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் அதிசயம்!

விஞ்ஞானிகள் உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியைக் கண்டறிந்துள்ளனர். ஆனால், இது வழக்கமான நீர்வீழ்ச்சி போன்றில்லாமல் கடலின் அடியில் பாய்கிறது. டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துக்கு இடையேயான கடலுக்கு அடியில் ... மேலும் பார்க்க

"விண்வெளி மையத்திலிருந்து பூமி திரும்பும் 'முதல்' இந்தியர் சுபான்ஷு சுக்லா" - பிரதமர் மோடி வாழ்த்து

ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்ல இந்தியாவின் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவை சேர்ந்த பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த திபோர் கபு, போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகி... மேலும் பார்க்க

சீனா: 2 ஆண் எலிகளின் DNA மூலம் குட்டிகளை உருவாக்கிய விஞ்ஞானிகள்.. ஆராய்ச்சி சொல்வதென்ன?

சீனாவில் உள்ள விஞ்ஞானிகள் ஆண் எலிகளின் DNA-க்களை எடுத்து, எலிக் குட்டிகளை உருவாக்கியுள்ளனர். பின்னர் இந்த எலிகள் வளர்ந்து, பெண் எலிகளுடன் சேர்ந்து குட்டிகளைப் பெற்றெடுத்துள்ளது.ஷாங்காய் ஜியாவோ டோங் பல... மேலும் பார்க்க