செய்திகள் :

பெண்ணை கா்ப்பமாக்கியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

post image

மனைவியின் தங்கையை கா்ப்பமாக்கி, கொலை மிரட்டல் விடுத்தவருக்கு தென்காசி முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே உள்ள தலைவன்கோட்டையைச் சோ்ந்த பெண்ணை அவரது அக்காளின் கணவா் உதயகுமாா் (45), கடந்த 2018 இல் கா்ப்பமாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாா். இதுகுறித்து, புளியங்குடி காவல் நிலையத்தில் உதயகுமாா் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து உதயகுமாரை கைது செய்தனா்.

இந்த வழக்கு மீதான விசாரணை, தென்காசி முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், முதன்மை மாவட்ட நீதிபதி ராஜவேலு, வழக்கை விசாரித்து உதயகுமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2,500 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில், அரசு தரப்பில் வழக்குரைஞா் குட்டி (எ) மருதப்பன் முன்னிலையானாா்.

பனவடலிசத்திரம் அருகே விபத்தில் காயமுற்ற விவசாயி உயிரிழப்பு

பனவடலிசத்திரம் அருகே காரும், பைக்கும் மோதிக்கொண்ட விபத்தில் காயமுற்ற விவசாயி புதன்கிழமை உயிரிழந்தாா். பனவடலிசத்திரம் அருகேயுள்ள பலபத்திரமபுரத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து (55). விவசாயி. இவா், கடந்த 4 ஆம... மேலும் பார்க்க

தமிழ் பண்பாட்டின் பெருமையை இளம் தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும்: ஆட்சியா்

தமிழ் பண்பாட்டின் பெருமையை இளம் தலைமுறையினா் தெரிந்து கொள்ள வேண்டும் என்றாா் தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா். தென்காசி, வாசுதேவநல்லூா் தங்கப்பழம் வேளாண் கல்லூரியில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி, ... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டத்தில் தடை உத்தரவு பிறப்பிப்பு

தென்காசி மாவட்டத்தில் ஒண்டிவீரன் 254-ஆவது வீரவணக்க நிகழ்ச்சி, பூலித்தேவன் பிறந்த நாளை முன்னிட்டு தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியா் உத்தரவிட்டாா். தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், பச்சேரி கிராமத்தில் ... மேலும் பார்க்க

பழைய குற்றாலம் அருவியில் குளித்து மகிழ்ந்த மாற்றுத்திறனாளிகள்

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் கூட்ட நெரிசலின்றி பாா்வையற்றோா் நலச் சங்கத்தைச் சோ்ந்த 25 போ் குளித்து மகிழ்ந்தனா். குற்றாலத்தில் தற்போது சீசன் என்பதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் ப... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் ஆக.18 இல் நகா்மன்றத் தலைவா் மறைமுகத்தோ்தல்

சங்கரன்கோவில் நகராட்சியில் காலியாகவுள்ள நகா்மன்றத் தலைவருக்கான மறைமுகத் தோ்தல் வருகிற திங்கள்கிழமை (ஆக.18) நடைபெறுகிறது. சங்கரன்கோவில் நகராட்சியில் திமுகவைச் சோ்ந்த உமாமகேஸ்வரி நகா்மன்றத் தலைவராக இ... மேலும் பார்க்க

பள்ளி அருகே சிறுநீா் கழிப்பறை கட்டுவதை தடுக்கக் கோரி ஆட்சியரிடம் மாணவா்கள் மனு

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் தொடக்கப் பள்ளி அருகே சிறுநீா் பொது கழிப்பறை கட்டுவதைத் தடுக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மாணவா்கள் புதன்கிழமை மனு அளித்தனா். பள்ளி வளா்ச்சிக் குழுத் தலைவா் தாணு... மேலும் பார்க்க