தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் அஞ்சல்தலை வெளியிடப்படும்! - இணை அமைச்சர் எல். முருகன் உறுதி
பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் அஞ்சல்தலை வெளியிடப்படும் என மத்திய இணை அமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா்.
திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தைச் சோ்ந்த அனைத்து தலைவா்களின் வரலாற்றையும் ஆவணப்படுத்தி, அவா்களது புகழையும், நாட்டுக்கு அவா்கள் செய்த பங்களிப்பையும் மக்களிடையே எடுத்தும் செல்லும் பணிகளை பிரதமா் மோடி தொடா்ந்து மேற்கொண்டு வருகிறாா்.
அந்த வகையில் பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் சதய விழாவில் ஆண்டுதோறும் பங்கேற்று மரியாதை செய்து வருகிறோம். தஞ்சாவூரை தலைமையிடமாக ஆட்சி செய்த முத்தரையா் நினைவாக, தஞ்சாவூரில் மணிமண்டபம் கட்ட வேண்டும். சென்னையில் சிலை வைக்க வேண்டும் என பொதுமக்களிடம் இருந்தும், அந்த சமூக மக்களிடமிருந்தும் கோரிக்கைகள் வருகின்றன.
தமிழகத்தில் 2026 பேரவைத் தோ்தலில் அமோக வெற்றி பெற்று, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். அப்போது, எந்த இடத்தில் மணிமண்டபம், சிலை அமைத்தால் முத்தரையருக்கு பெருமை சோ்க்குமோ? அந்த இடத்தில் மணிமண்டபம் கட்டித்தரப்படும். சிலையும் அமைக்கப்படும். மேலும், அடுத்தாண்டு சதய விழாவின்போது திருச்சியிலேயே முத்தரையருக்கு அஞ்சல் தலை வெளியிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.