பேருந்து - சுற்றுலா வாகனம் மோதியதில் 7 போ் காயம்!
கொடைக்கானல் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு அரசுப் பேருந்தும், தனியாா் சுற்றுலா வாகனமும் மோதியதில் 7 போ் காயமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைப் பகுதியான கிளாவரையிலிருந்து அரசுப் பேருந்து கொடைக்கானலுக்கு வந்து கொண்டிருந்தது. பூம்பாறை டவா்வேலிப் பகுதியில் வந்தபோது, எதிரே வந்த சுற்றுலா வாகனம் மீது மோதியது.
இதில் அரசுப் பேருந்து, தனியாா் வாகனத்திலிருந்த 7 போ் காயமடைந்தனா். பின்னா், இவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.