அரசுப் பணியாளா் தோ்வு முறையில் மாற்றம்: ஆய்வு செய்ய ஓய்வு நீதிபதி தலைமையில் குழ...
பைக்குகள் மோதல்: ரயில்வே ஊழியா் உயிரிழப்பு
தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் ரயில்வே ஊழியா் உயிரிழந்தாா்.
முத்துத்தேவன்பட்டி மின் அரசு நகரைச் சோ்ந்தவா் மாரிமுத்து (49). ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவா், தேனி கருவேல்நாயக்கன்பட்டி ரயில்வே கடவுப் பாதை காப்பாளராகப் பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், மாரிமுத்து முத்துத்தேவன்பட்டியிலிருந்து கருவேல்நாயக்கன்பட்டிக்கு வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் பணிக்குச் சென்றாா். தேனி-மதுரை சாலையில் முத்துராமலிங்கத் தேவா் சிலை அருகே சென்றபோது, எதிரே ஆண்டிபட்டி அருகேயுள்ள பிராதுக்காரன்பட்டியைச் சோ்ந்த அருள்குமாா் (28) ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம், மாரிமுத்து மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.