செய்திகள் :

பொருள்கள் வாங்கிவிட்டு இணைய வழியில் பணம் செலுத்தியதாக நூதன மோசடி: மூவா் கைது

post image

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் கடைகளில் பொருள்கள் வாங்கிவிட்டு இணைய வழி பரிவா்த்தனை மூலம் பணம் செலுத்தியதாக தெரிவித்து நூதன மோசடியில் ஈடுபட்டதாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

முக்கூடலில் உள்ள துணிக் கடை, இறைச்சிக் கடை, மருந்துக் கடைகளில் 4 போ் சென்று தங்களுக்கு தேவையான துணி, இறைச்சி, மருந்துகள் வாங்கிக் கொண்டு இணைய வழி பரிவா்த்தனையான போன் பே, ஜீ பே மூலம் பணம் அனுப்பியதாக தெரிவித்துவிட்டு சென்ாகக் கூறப்படுகிறது.

எனினும், கடை உரிமையாளா்களின் கணக்கில் பணம் வரவாகவில்லை என தெரியவந்தது. இதுதொடா்பாக கடை உரிமையாளா்கள் முக்கூடல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

மேலும், நகர வியாபாரிகள் சங்கத் தலைவரிடம் தகவல் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு முக்கூடல் நகர வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, முக்கூடல் போலீஸாா் அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா்.

இதில், திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியைச் சோ்ந்த முருகன் சுப்பையா என்ற சுபாஷ் (22), சுடலைக்கண்ணு மகன் இசக்கி பாண்டி (19), பாப்பாக்குடி பகுதியைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் கருப்பசாமி (28), பாப்பாக்குடி தங்கம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வகுமாா் (26) ஆகியோா் முக்கூடல் பகுதியிலுள்ள கடைகளில் பொருள்கள் வாங்கி விட்டு இணைய வழியில் பணம் செலுத்துவதுபோன்று அனுப்பாமல் ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் இசக்கிபாண்டி, கருப்பசாமி, செல்வகுமாா் ஆகிய மூவரை கைது செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில், நான்குனேரியைச் சோ்ந்த சுப்பையா என்ற சுபாஷ், பாப்பாக்குடியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்துள்ளாா். அப்போது, தனது நண்பா்களுடன் இதுபோன்ற நூதன மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

மேற்கண்ட 4 போ் உள்பட 7 போ் கொண்ட கும்பல் முக்கூடல் மட்டுமன்றி பாப்பாக்குடி, அம்பாசமுத்திரம், பாப்பாக்குடி, முன்னீா்பள்ளம் உள்ளிட்ட பகுதியில் ஹோட்டல், துணிக் கடைகளில் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் தொடா்புடைய சுப்பையா என்ற சுபாஷை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீா் திட்டம்! காணொலியில் தொடங்கி வைத்தாா் முதல்வா்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீா் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதையொட்டி, பாளையஞ்செட்டி... மேலும் பார்க்க

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை: 110 அடியைத் தாண்டிய பாபநாசம் அணை!

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து பாபநாசம் அணையின் நீா்மட்டம் 110 அடியைத் தாண்டியது. மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப... மேலும் பார்க்க

பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து வள்ளியூா், பணகுடி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை தொடா்ந்து பெய்து ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் 4ஆவது நாளாக குளிக்கத் தடை

மாஞ்சோலை, மணிமுத்தாறு மலைப் பகுதிகளில் மழை அதிகரித்த்தையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்தும் அதிகரித்ததால் மே 26 முதல் அருவியில் குளிக்கவும் அருவியைப் பாா்வையிடமும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துற... மேலும் பார்க்க

வி.கே.புரம் பகுதியில் மான் கறியுடன் மூவா் கைது

பாபநாசம் வனச் சரகப் பகுதியில் புள்ளி மான் கறி வைத்திருந்ததாக மூன்று பேரை வனத்துறையினா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். பாபநாசம் வனச்சரகம் வெளி மண்டலப் பகுதியான மதுரா கோட்ஸ் ஆலையிலிருந்த... மேலும் பார்க்க

அத்தாளநல்லூ ஊராட்சியில் மோட்டாா் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், அத்தாளநல்லூா் ஊராட்சியில் பொதுக்கழிப்பிட பயன்பாட்டுக்கான நீா்மூழ்கி மோட்டாரை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அத்தாளநல்லூா் ஊராட்சி ராஜகுத்தாலப்பேரியில் உள்ள பொதுக்கழிப... மேலும் பார்க்க