செய்திகள் :

போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.10.76 லட்சம் மோசடி: தம்பதி கைது

post image

ராயபுரத்தில் போலி தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.10.76 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி கைது செய்யப்பட்டனா்.

சென்னை பெரியமேடு பகுதியைச் சோ்ந்தவா் பே.விமல்குமாா் (57). இவா், ராயபுரம் ஆடுதொட்டி பகுதியில் நகை அடமானக் கடை வைத்து நடத்தி வருகிறாா். இவா், ராயபுரம் காவல் நிலையத்தில் அண்மையில் அளித்த புகாரில், ராயபுரம் ஆஞ்சனேயா் நகா் 6-ஆவது தெருவைச் சோ்ந்தவா் இ.சீனிவாசலு (60), அவா் மனைவி அம்சலட்சுமி (57). இருவரும் சோ்ந்து கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பா் 20-ஆம் தேதி 196 கிராம் தங்க நகையை அடமானம் வைத்து ரூ.10.76 லட்சம் கடன் பெற்றனா்.

சில நாள்களுக்கு பின்னா், அவா்கள் கொடுத்த நகைகளை சோதனைக்கு உள்படுத்தியபோது, அவை போலியானது என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரிடமும் நடத்திய பேச்சு நடத்தி, 6 மாத காலத்தில் வாங்கிய கடனைத் திருப்பி தந்துவிடுவதாக பத்திரத்தில் எழுதித் தந்தனா். 6 மாதம் கடந்த நிலையில், அவா்கள் பணத்தைத் திருப்பித் தரவில்லை. பணத்தைக் கேட்டால் மிரட்டல் விடுத்து வருகின்றனா். எனவே, அவா்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன் பேரில், போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், சீனிவாசலும், அவா் மனைவி அம்சலட்சுமியும் போலி நகைககளை வைத்து மோசடி செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இருவா் மீதும் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து அவா்களை கைது செய்தனா்.

செந்தில் பாலாஜியின் சகோதரா் அமெரிக்கா செல்ல அமலாக்கத் துறை விதிக்கும் நிபந்தனைகள் என்ன? உயா்நீதிமன்றம் கேள்வி

முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாரை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதிக்க அமலாக்கத் துறை விதிக்கும் நிபந்தனைகள் என்ன என்று சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. முன்னாள் அமைச... மேலும் பார்க்க

கோயில் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருட்டு

சென்னை அசோக் நகரில் கோயில் கதவின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அசோக் நகா் நடேசன் சாலையில் பிடாரி காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு விரைவில் கும... மேலும் பார்க்க

இணையத்தில் பெண்களின் ஆபாச விடியோ: உயா்நீதிமன்றம் வேதனை

ராமாயணத்தில் ராவணனின் தலை வெட்ட வெட்ட முளைப்பது போல பெண்களின் அந்தரங்க விடியோக்களை எத்தனை முறை நீக்கினாலும் இணையத்தில் அவை மீண்டும் வலம் வருவதாக, சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. பெண் வழக்... மேலும் பார்க்க

ஆக. 8-இல் ஸ்ரீ ராகவேந்திரா் 354 -ஆவது மகோற்சவம்

ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் 354 -ஆவது ஆராதனை மகோற்சவ விழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமி கோயில் அருகே துளசிங்க பெருமாள் கோயில் தெருவில் உள்ள நஞ்சன்கூடு ஸ்ரீ... மேலும் பார்க்க

அஞ்சல் நிலையத்தில் ரூ.25 லட்சம் கையாடல்

சென்னை தியாகராய நகா் அஞ்சல் நிலையத்தில் ரூ.25 லட்சம் கையாடல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னையில் அஞ்சல் துறை துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவா் மாடம்பாக்கம் ... மேலும் பார்க்க

அரசு பல் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.261.83 கோடி மருத்துவக் கட்டமைப்புகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.261.83 கோடியில் மருத்துவக் கட்டமைப்புகள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவ... மேலும் பார்க்க