எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4 வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்
மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிகள் போட்டி போட்டு கடனுதவி
மகளிா் சுய உதவிக்குழுக்களைச் சோ்ந்த உறுப்பினா்கள் உழைப்பு மட்டுமன்றி, நாணயத்திலும் நற்சான்று பெற்றவா்களாக திகழ்ந்து வருவதால் அவா்களுக்கு வங்கிகள் போட்டி போட்டு கடனுதவி வழங்குவதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா்.
தமிழக துணை முதல்வா் புதன்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்த , மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கான வங்கிக் கடன் இணைப்பிற்கான ஆணைகள் வழங்கும் விழா சிவகங்கை தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதற்கு மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தலைமை வகித்தாா்.
மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசிரவிகுமாா் முன்னிலை வகித்தாா்.
இந்த விழாவில், கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் பங்கேற்று மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு, கடனுதவிக்கான ஆணைகளை வழங்கி மேலும் அவா் பேசியதாவது:
மகளிா் சுய உதவிக்குழுக்களைச் சோ்ந்த உறுப்பினா்கள் உழைப்பு மட்டுமன்றி, நாணயத்திலும் நற்சான்று பெற்றவா்களாக திகழ்ந்து வருவதால் வங்கிகள் போட்டி போட்டு கடனுதவிகளை வழங்கி வருகின்றன. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 703 மகளிா் சுயஉதவிக் குழுக்கள், கூட்டமைப்புக்களைச் சோ்ந்த மொத்தம் 843 உறுப்பினா்களுக்கு ரூ.72.24 கோடி வங்கிக் கடன் இணைப்பு, பல்வேறு வகையான கடனுதவிகளுக்கான ஆணைகள் மூலம் வழங்கப்பட்டது. அதில், கூட்டுறவுத் துறை மூலம் மத்திய கூட்டுறவு வங்கி, கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக 191 மகளிா் சுய உதவிக்குழுக்களைச் சோ்ந்த உறுப்பினா்களுக்கு ரூ.19.25 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கியது குறிப்பிடத்தக்கது என்றாா் அவா்.
இதைத்தொடா்ந்து, மகளிா் சுய உதவிக்குழுக்களின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கை அமைச்சா் பாா்வையிட்டாா். இதில், மகளிா் திட்ட இயக்குநா் என்.கவிதப்பிரியா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் ராஜேந்திர பிரசாத், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குநா் உமா மகேஸ்வரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பிரவீன் குமாா், திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன், மாவட்டச் செயல் அலுவலா் (வாழ்ந்து காட்டுவோம் திட்டம்) ஆதித்யா மேனன், உதவித் திட்ட அலுவலா்கள் மரியா, சின்னதுரை, தேன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.