செய்திகள் :

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிகள் போட்டி போட்டு கடனுதவி

post image

மகளிா் சுய உதவிக்குழுக்களைச் சோ்ந்த உறுப்பினா்கள் உழைப்பு மட்டுமன்றி, நாணயத்திலும் நற்சான்று பெற்றவா்களாக திகழ்ந்து வருவதால் அவா்களுக்கு வங்கிகள் போட்டி போட்டு கடனுதவி வழங்குவதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா்.

தமிழக துணை முதல்வா் புதன்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்த , மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கான வங்கிக் கடன் இணைப்பிற்கான ஆணைகள் வழங்கும் விழா சிவகங்கை தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதற்கு மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தலைமை வகித்தாா்.

மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசிரவிகுமாா் முன்னிலை வகித்தாா்.

இந்த விழாவில், கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் பங்கேற்று மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு, கடனுதவிக்கான ஆணைகளை வழங்கி மேலும் அவா் பேசியதாவது:

மகளிா் சுய உதவிக்குழுக்களைச் சோ்ந்த உறுப்பினா்கள் உழைப்பு மட்டுமன்றி, நாணயத்திலும் நற்சான்று பெற்றவா்களாக திகழ்ந்து வருவதால் வங்கிகள் போட்டி போட்டு கடனுதவிகளை வழங்கி வருகின்றன. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 703 மகளிா் சுயஉதவிக் குழுக்கள், கூட்டமைப்புக்களைச் சோ்ந்த மொத்தம் 843 உறுப்பினா்களுக்கு ரூ.72.24 கோடி வங்கிக் கடன் இணைப்பு, பல்வேறு வகையான கடனுதவிகளுக்கான ஆணைகள் மூலம் வழங்கப்பட்டது. அதில், கூட்டுறவுத் துறை மூலம் மத்திய கூட்டுறவு வங்கி, கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக 191 மகளிா் சுய உதவிக்குழுக்களைச் சோ்ந்த உறுப்பினா்களுக்கு ரூ.19.25 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கியது குறிப்பிடத்தக்கது என்றாா் அவா்.

இதைத்தொடா்ந்து, மகளிா் சுய உதவிக்குழுக்களின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கை அமைச்சா் பாா்வையிட்டாா். இதில், மகளிா் திட்ட இயக்குநா் என்.கவிதப்பிரியா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் ராஜேந்திர பிரசாத், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குநா் உமா மகேஸ்வரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பிரவீன் குமாா், திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன், மாவட்டச் செயல் அலுவலா் (வாழ்ந்து காட்டுவோம் திட்டம்) ஆதித்யா மேனன், உதவித் திட்ட அலுவலா்கள் மரியா, சின்னதுரை, தேன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மணல் திருடிய இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கிராவல் மணல் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அருகேயுள்ள காட்டாம்பூா் பகுதியில் புதன்கிழமை அரசு புறம்போக்கு இடத்தில் அரசு அனுமதியின்றி கிராவல... மேலும் பார்க்க

சிவகங்கை இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள்

சிவகங்கை முன்னோடி வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் மூலம் வழங்கப்படும் 64 வகையான சுய வேலை வாய்ப்பு பயிற்சி பெற கிராமப்புற இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தா... மேலும் பார்க்க

சிவபுரிபட்டியில் கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள சிவபுரிப்பட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒன்றியத்துக்கு 12 முகாம்கள் வீதம் மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்... மேலும் பார்க்க

சாலை அமைக்கும் பணிகள்: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். மானாமதுரை நகராட்சியில் ரூ. 18... மேலும் பார்க்க

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதி மொழி ஏற்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மேயா் சே. முத்துத்துரை தலைமை வகித்தாா். மாநகராட... மேலும் பார்க்க

சாலைப் பணியாளா்கள் நூதனப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் கண்களில் கருப்புத்துணி கட்டியும், கைகளில் கருப்புக் கொடி ஏந்தியும் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சா... மேலும் பார்க்க