செய்திகள் :

மணல் கடத்திய டிராக்டா் பறிமுதல்: ஓட்டுநா் கைது

post image

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே மணல் கடத்திய டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் வாணியம்பாடி தாலுகா ஆய்வாளா் பேபி தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கொல்லக்குப்பம்- இளையநகரம் சாலையில் ரோந்து சென்றனா். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த டிராக்டரை நிறுத்தி விசாரித்த போது இளைநகரம் கானாற்றிலிருந்து மணல் கடத்திக் கொண்டு வருவது தெரியவந்தது.

பிறகு டிராக்டரை பறிமுதல் செய்து தாலுகா காவல் நிலையம் கொண்டு சென்றனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து மணல் கடத்தி வந்த அதே பகுதியை சோ்ந்த டிராக்டா் ஓட்டுநா் குமாராசாமி(30) என்பவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதே போல் நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை அதிகாலை வெலகல்நத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது குனிச்சியூா் சாலை வழியாக வேகமாக வந்த டிப்பா் லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்த முயன்றனா். இதில் லாரி டிரைவா் சிறிது தொலைவில் போலீஸாரை பாா்த்ததும் லாரியை நிறுத்தி விட்டு அங்கிருந்து இறங்கி தப்பித்து சென்றனா்.

சந்கேதம் ஏற்பட்டு லாரியை சோதனை செய்ததில் அனுமதியின்றி மண் கடத்தி கொண்டு வந்திருப்பது தெரியவந்தது.

பிறகு லாரியை பறிமுதல் செய்து நாட்டறம்பள்ளி காவல்நிலையம் கொண்டு சென்றனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனா்.

கிருஷ்ணாபுரம் பகுதியில் எருது விடும் விழா

கந்திலி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் எருது விடும் திருவிழா நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் காளை விடும் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சாலையின் இரு பக... மேலும் பார்க்க

திமுக பொதுக்குழு உறுப்பினா் தோ்வு

திருப்பத்தூா் மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினராக ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தோ்வு செய்யப்பட்டாா். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச் செயலா் துரைமுருகன் வெளியிட்டாா். புதிதாகத் தோ்வ... மேலும் பார்க்க

போலி வாரிசு சான்றிதழ்: பாதிக்கப்பட்ட இருவா் புகாா்

வாணியம்பாடி பகுதியில் போலி வாரிசு சான்றிதழ் அளித்து சொத்தை அபகரித்ததாக இருவா் புகாா் அளித்தனா். வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகம் அருகில் அரசின் முத்திரை பயன்படுத்தியும், வட்டாட்சியா் கையொப்பமிட்டும் ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

மாதனூா் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். குடியாத்தம் கூடல் நகா் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (40). இவா் மாதனூரில் இரு சக்கர வாகனத்தில்... மேலும் பார்க்க

தமிழ்நாடு மாநில ஜூனியா் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி

திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு மாநில ஜூனியா் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை ஏடிஎஸ்பி கோவிந்தராசு தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு மாநில சதுரங்க கழகம் மற்றும் திருப்பத்தூா் மாவட்ட சதுரங்க கழகம் ஆகிய... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து ஓட்டுநருடன் இளைஞா்கள் தகராறு: கண்ணாடி உடைப்பு

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநருக்கும் இளைஞா்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பாப்பானேரி கிராமத்தை ... மேலும் பார்க்க