செய்திகள் :

மதுரை: ஸ்டாலின் உத்தரவு; விசாரித்த நேரு! - மாநகராட்சி மண்டலத் தலைவர்களை ராஜினாமா செய்ய சொன்ன தலைமை

post image

மதுரை மாநகராட்சியில் தனியார் கட்டடங்களுக்கான வரிவிதிப்பில் ரூ.200 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், மாநகராட்சியிலுள்ள 5 மண்டலத் தலைவர்களையும் ராஜினாமா செய்ய திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5 மண்டலத் தலைவர்கள்

தனியார் கட்டடங்களுக்கு வரியை குறைவாக நிர்ணயித்து மதுரை மாநகராட்சிக்கு ரூ. 200 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்திய புகாரில் கடந்த ஆண்டு அப்போதைய கமிஷனர் தினேஷ்குமார், ஐந்து பில் கலெக்டர்களை சஸ்பெண்ட் செய்ததோடு, கமிஷனரின் பாஸ்வேர்ட் தவறாக பயன்படுத்தபட்டதால் சைபர் கிரைம் போலீரிடமும் புகார் கொடுத்தார்.

அவர் மாற்றலாகி சென்ற பின்பு இந்த முறைகேட்டு வழக்கில் விசாரணை மேற்கொண்ட மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சமீபத்தில் ஓய்வு பெற்ற மாநகராட்சி உதவி கமிஷனர் உட்பட 8 பேரை கைது செய்தனர், தொடர்ந்து மண்டலத் தலைவர்களிடமும் விசாரணையும் நடத்தினர்.

ஸ்டாலின் உத்தரவு.... நேரில் வந்து விசாரித்த நேரு!

இந்த நிலையில் இந்த மிகப்பெரும் மோசடிக்கு பின்னாலுள்ள அனைவரையும் விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான அதிமுக மட்டுமின்றி கூட்டணிக் கட்சியான சிபிஎம்மும் வலியுறுத்தி வந்தன. இந்த மோசடியை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக சார்பில் ஆர்பாட்டமும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று மாலை மதுரை வந்தார்.

விசாரணை நடத்த வந்த அமைச்சர் நேரு

மாநகராட்சி அலுவலகத்தில் மாலை 6 மணி முதல் விசாரணை தொடங்கியது. மேயர் இந்திராணியிடமும், மண்டலத் தலைவர்கள் சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, கவிதா ஒவ்வொருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆவணங்களை ஆதராமாக வைத்துக்கொண்டு சுமார் 20 நிமிடங்கள் விசாரணை நடைபெற்றது. அப்போது அமைச்சர்கள் பி.மூர்த்தியும், பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனும் உடன் இருந்தனர்.

அதைத்தொடர்ந்து மண்டலத் தலைவர்கள் 5 பேரும், வரி விதிப்புக்குழுவைச் சேர்ந்த இருவரும் ராஜினாமா செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரம் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்தாலும், நடந்த மிகப்பெரும் மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதுதான் அனைவரின் கேள்வியாக உள்ளது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

கடலூர் பள்ளி வேன் விபத்து: ``சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டாக கலெக்டர் அனுமதி தராததே காரணம்'' - இபிஎஸ்

கடலூரில் இன்று காலை தனியார் பள்ளி வேன் ஒன்று செம்மங்குப்பம் ரயில்வே பாதையைக் கடக்கும்போது ரயில் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில், பதினொன்றாம் வகுப்பு மாணவி சாருமதி மற்றும் ஆறாம் வகுப்பு நிவாஸ் ஆ... மேலும் பார்க்க

UP: 7-ம் வகுப்பு மாணவிக்கு யோகி ஆதித்யநாத் அளித்த நம்பிக்கை; மறுத்த பள்ளி நிர்வாகம் - என்ன நடந்தது?

பன்குரி திரிபாதி என்ற 7-ம் வகுப்பு மாணவி உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் தனது கல்விக்கு உதவி கேட்டது, அந்த மாநிலத்தில் அரசியல் பிரச்னையாக மாற்றப்பட்டுள்ளது. பன்குரியின் தந்தை ராஜீவ் குமார... மேலும் பார்க்க

மேட்டுப்பாளையத்தில் இ.பி.எஸ். விவசாயிகளின் குரலோடு தொடங்கிய பயணம்

நேற்று, ஜூலை 7, 2025 அன்று கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலில் உற்சாகத்தோடு தொடங்கியது எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் ’புரட்சி தமிழரின் எழுச்சி பயணம்’அதிமுக பொதுச் செயலாளரும், சட்... மேலும் பார்க்க

Secularism: `மதச்சார்பின்மையை நீக்க நினைக்கும் பாஜக' - என்ன தான் பிரச்னை? | ஓர் அலசல்

``சோசலிசம்" மற்றும் "மதச்சார்பின்மை" என்ற இரண்டு சொற்களை அரசியலமைப்பின் முன்னுரையில் சேர்த்ததன் மூலம் அரசியலமைப்பு முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. நாம் நடுநிலையாக இருந்தால், சத்திரங்களுக்கு (வைணவ மடங்கள... மேலும் பார்க்க

ட்ரம்ப் 15 நாடுகளுக்கு கடிதம்; `Just Miss' ஆன இந்தியா! இந்தியா, அமெரிக்கா ஒப்பந்தத்தின் நிலை என்ன?

ஏப்ரல் மாதம் பரபரப்பாக பேசப்பட்ட ஒன்று, இப்போது மீண்டும் ஹெட்லைன்களில் இடம்பெற தொடங்கியுள்ளது.கடந்த ஏப்ரல் மாதம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த 'பரஸ்பர வரி'யின் மாற்றப்பட்ட வட்டி விகிதங்கள் நாளை அற... மேலும் பார்க்க