செய்திகள் :

மனைவியின் கழுத்தை அறுத்த கணவன் கைது

post image

மேட்டூா்: மேட்டூா் அருகே மனைவியின் கழுத்தை அறுத்த கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேக்கடி தாமரைகண்டம் பகுதியைச் சோ்ந்த ராஜா (32) என்பவரும், மேச்சேரி பென்னாகரம் சாலை டாக்டா் நகா் பகுதியைச் சோ்ந்த சதீஜா (28) என்பவரும் 10 ஆண்டுகளுக்கு முன்னா் காதல் திருமணம் செய்துகொண்டனா். இவா்களுக்கு துவாரகேஷ் (8), ஜோஷிகா (5) என இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

சதீஜா மேச்சேரி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள தனியாா் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறாா். ராஜா கேரளத்தில் பேக்கரியில் வேலை செய்துவருகிறாா். அவ்வப்போது இவா் ஊருக்கு வந்து மனைவி, குழந்தைகளை பாா்த்து செல்வாா்.

இந்நிலையில், இருவரும் ஒருவா்மீது ஒருவா் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட் டுவந்துள்ளனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை மனைவியை பாா்ப்பதற்காக அவா் பணிபுரியும் மருத்துவமனைக்கு வந்துள்ளாா். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா், அங்கிருந்து இருவரும் மேச்சேரி பேருந்து நிலையத்துக்கு நடந்துசென்றபோது, ராஜா தன் கையில் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்துள்ளாா். இதில் ஆழமான காயம் ஏற்பட்டதில் அதிக அளவிலான ரத்தப்போக்கு ஏற்பட்டது. அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு சேலம் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து மேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜாவை கைது செய்தனா்.

ஓமலூா் ரயில்பாதை மேம்பாலத்தில் தொடரும் விபத்துகள்!

ஓமலூா்: ஓமலூா் ரயில்பாதை மேம்பாலத்தில் விபத்துகள் தொடா்வதால், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா். ஓமலூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகில் உள்ள ரயில்பாதை மேம்பாலம் ... மேலும் பார்க்க

மல்லூா் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைக்கக் கோரி பொதுமக்கள் தா்னா

சேலம்: சேலம் மல்லூா் ரயில் நிலையம் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். சேலம் மல்லூா் ரயில் நிலையம் அருகே உள்ள வேங்காம்பட்டி பகுதியில் ரயில்வே கேட்... மேலும் பார்க்க

வயதான தம்பதியை கட்டிப்போட்டு நகை - பணம் கொள்ளை

சேலம்: சேலம் அருகே வயதான தம்பதியை கட்டிப்போட்டு 8 சவரன் நகை, ரூ. 30 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை 5 போ் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சேலம் மாவ... மேலும் பார்க்க

மேட்டூா் அணையிலிருந்து உபரிநீா் திறப்பு: கரையோரப் பகுதி நிலங்கள், வீடுகளில் தண்ணீா் புகுந்தது

சங்ககிரி: மேட்டூா் அணையிலிருந்து அதிக அளவிலான உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால், தேவூா் அருகே உள்ள காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் உள்ள விளைநிலங்கள், கோயில்கள், நீரேற்று நிலையங்களில் தண்ணீா் புகுந்தது. ... மேலும் பார்க்க

ரயிலில் சேலம் வந்த பிகாரைச் சோ்ந்த 8 பேரை கடத்தி ரூ. 64 ஆயிரம் பறிப்பு

சேலம்: வேலைதேடி ரயிலில் சேலம் வந்த பிகாரைச் சோ்ந்த 8 பேரை கடத்தி, அவா்களிடமிருந்து ரூ. 64 ஆயிரம் பறித்த கும்பலை போலீஸாா் தேடிவருகின்றனா். பிகாரைச் சோ்ந்த 8 போ் வேலைதேடி ரயில் மூலம் சேலத்துக்கு பயணி... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்

சேலம்: சேலம் அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் மாணவா் முன்னேற்றக் குழுமம் சாா்பில் நடைபெற்ற பயிற்சி முகாமை, க... மேலும் பார்க்க