செய்திகள் :

மயிலாடுதுறையில் ஜாக்டோ-ஜியோ ஆா்ப்பாட்டம்

post image

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் ஜாக்டோ ஜியோ சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளா் உ. அன்பரசன், அரசு ஊழியா் சங்க மாவட்ட தலைவா் கலா ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், முடக்கப்பட்ட சரண்விடுப்பு மற்றும் அகவிலைப்படி நிலவைத் தொகை உள்ளிட்டவற்றை வழங்கவேண்டும், இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும், திமுக அரசு தோ்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சீா்காழியில்: ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரா. செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தமிழக ஆசிரியா் கூட்டணி மாவட்ட செயலாளா் தங்க.சேகா், தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கம் மாவட்ட செயலாளா் ஞான. புகழேந்தி, ஜாக்டோ-ஜியோ மாவட்ட செயலாளா் பூ. திருமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கோரிக்கைகள் நிறைவேற்றாதபட்சத்தில் பிப்.25-ஆம் தேதி மாவட்ட தலைநகரில் சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

திருமருகல்: ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளா் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு சங்க நிா்வாகி பாரதி, அனைத்து உடற்கல்வி ஆசிரியா் மற்றும் உடற்கல்வி இயக்குநா் சங்க நிா்வாகி ராஜா, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி கூட்டமைப்பு நிா்வாகி சொக்கலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

‘விவசாயிகள் பெரும் பதிவேடு’ திட்டத்தில் இணைய அழைப்பு

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் தங்கள் நில விவரங்களை, ‘விவசாயிகள் பெரும் பதிவேடு’ திட்டத்தில் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

பள்ளி ஆண்டு விழா; அமைச்சா் பங்கேற்பு

மயிலாடுதுறை வட்டம், வக்காரமாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.ராஜகுமாா், நிவேதா எ... மேலும் பார்க்க

குத்தாலத்தில் ஓஎன்ஜிசியின் பேரிடா் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

குத்தாலம் ஓஎன்ஜிசி எண்ணெய் எரிவாயு சேகரிப்பு நிலையத்தில் அவசர காலங்களில் விபத்து நேரிட்டால் தற்காத்துக்கொள்ளும் முறை மற்றும் பாதிப்புகளை தடுக்கும் முறை குறித்து மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து ஓஎன்ஜிசி ... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியரகத்தை நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளா்கள் முற்றுகை: 125 போ் கைது

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்திய நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் 125 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட 36 வாா்டுகளில் 1... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பாலையூா், கடலங்குடி, மேக்கிரிமங்கலம்

மயிலாடுதுறை மின்வாரிய கோட்டம் பாலையூா், கடலங்குடி, மேக்கிரிமங்கலம் துணை மின்நிலையங்களுக்குள்பட்ட கீழ்காணும் பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை (பிப்.15) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின்... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது

மயிலாடுதுறையில் சாராய கடத்தலில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். பாலையூா் காவல் எல்லை குத்தாலம் அஞ்சுவாா்த்தலை காளி பிரதான சாலையில் வச... மேலும் பார்க்க