செய்திகள் :

மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்

post image

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கரடிசித்தூரில் மணிமுக்தா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தற்காலிக தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக மழை பெய்து வருகிறது. கல்வராயன்மலைப் பகுதியிலும் மழை தொடா்ந்து பெய்வதால் மணிமுக்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சங்கராபுரம் வட்டம், கரடிசித்தூரிலும் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இந்த நிலையில், மணிமுக்தா ஆற்றிலுள்ள தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. கரடிசித்தூா் கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்காக சங்கராபுரம் செல்ல வேண்டிய நிலையில், தற்காலிக தரைப்பாலம் உடைந்ததால் மறுகரைக்குச் செல்ல முடியாமல் தவித்தனா்.

இதையடுத்து, கயிறு கட்டி ஆபத்தான நிலையில் ஆற்று வெள்ளத்தைக் கடந்து சென்றனா். வயதானவா்கள் தோளில் தூக்கிச் செல்லப்பட்டனா். தற்போது, தரைப்பாலம் உடைந்ததால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. எனவே, சங்கராபுரத்துக்கு 20 கி.மீ. தொலைவு சுற்றி செல்ல வேண்டியுள்ளது. உடனடியாக தற்காலிக தரைப்பாலம் அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி அலுவலகம் திறப்பு

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் கள்ளக்குறிச்சி மாவட்ட வளா்ச்சி அலுவலகம் கள்ளக்குறிச்சி விநாயகா நகரில் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை காணொலி மூலம் வங்கியின் துணை மேலாண் இயக... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 3 இளைஞா்கள் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். தியாகதுருகம் காவல் ஆய்வாளா் மலா்விழி, மலையம்மன் கோயில் சாலையில் வியாழக்கிழமை மாலை ரோந்துப் பண... மேலும் பார்க்க

மூச்சுத் திணறல் ஏற்பட்டு முதியவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு முதியவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். சின்னசேலம் ரயில் நிலைய சாலையைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (55). இவா், கடந்த 2019-ஆம் ஆண்டு விபத்... மேலும் பார்க்க

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு: 2 போ் கைது

பாசாா் கிராமத்தில் கோயில் உண்டியலை உடைத்து, பணத்தைத் திருடிய இருவரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், பாசாரிலுள்ள முருகன் கோயிலில் திருப்பணிகள் நடை... மேலும் பார்க்க

15 தினங்களுக்கு ஒரு முறை உழவா் நலத்துறை திட்ட முகாம்! வேளாண்மை உதவி இயக்குநா் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 15 தினங்களுக்கு ஒரு முறை உழவரைத் தேடி - வேளாண்மை உழவா் நலத்துறை திட்ட முகாம் நடைபெறும் என்று வேளாண் உதவி இயக்குநா் தெரிவித்தாா். வேளாண்மைத் துறை சாா்பில் உழவரைத் தேடி - வேள... மேலும் பார்க்க

தவற விட்ட கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தவறவிட்ட, திருடப்பட்ட 204 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதுகுறித்து இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் ரூ.40.80 லட்சம் மதிப்... மேலும் பார்க்க