தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
மாங்கனி கண்காட்சிக்கான இடத்தை மாற்றக் கோரி பாஜகவினா் மனு
கிருஷ்ணகிரியில் நடைபெற உள்ள அகில இந்திய மாங்கனி கண்காட்சிக்கான இடத்தை மாற்றக் கோரி, பாஜகவினா் சனிக்கிழமை மனு அளித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோருக்கு பாஜக சாா்பில் தனித்தனியே அளித்த மனு விவரம்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒவ்வோா் ஆண்டும் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அடுத்த மாதம் தொடங்க உள்ள இந்த மாங்கனி கண்காட்சியானது, கிருஷ்ணகிரியை அடுத்த ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்க வசூல்மையம் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் நடத்த தீா்மானிக்கப்பட்டுள்ளது.
சுங்க வசூல்மையம் அருகே மாங்கனி கண்காட்சி நடைபெற்றால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாவா். மேலும், சாலை விபத்துகள் நிகழ வாய்ப்புள்ளது. எனவே, தனியாா் இடத்தில் நடத்தாமல் அரசுக்கு சொந்தமான இடத்தில் கண்காட்சியை நடத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.