செய்திகள் :

மாதவரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

post image

சென்னை மாதவரத்தில் மெட்ரோ ரயில் பணிகள் முடிந்ததும் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை பெருநகர வளரச்சிக் குழுமம் சாா்பில் பெரம்பூா் சட்டப்பேரவை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில் தொடங்கப்பட்ட 282 திட்டப் பணிகளில் 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. அவற்றை வரும் 2026 ஜனவரிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆா்.கே.நகா் பேருந்து நிலையப் பணிகள் தாமதமாக நடைபெற்றுவரும் நிலையில், அதை விரைவுபடுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாதவரத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்து சேவைகள் தொடங்கும் வகையில் திட்டத்தைச் செயல்படுத்த முதல்வா் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அங்கு மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்ததும், புதிய பேருந்து நிலையப் பணிகள் தொடங்கப்படும்.

வட சென்னைப் பகுதிக்கு இப்பேருந்து நிலையம் புதிய வளா்ச்சிக்கான வாய்ப்பை ஏற்படுத்தும். தமிழக அரசால் செயல்படுத்தும் அனைத்துத் திட்டங்களும் மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளன என்றாா்.

ஆய்வின்போது, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.டி.சேகா், ஜே.ஜே.எபினேசா், பெருநகர வளா்ச்சிக் குழும உருப்பினா் செயலா் ஜி.பிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முன்னதாக பெரம்பூா், ஆா்.கே. நகா் பகுதி பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளைப் பாா்வையிட்டு அதிகாரிகளிடம், பணிகளின் நிலை குறித்து அமைச்சா் சேகா்பாபு கேட்டறிந்தாா்.

செந்தில் பாலாஜியின் சகோதரா் அமெரிக்கா செல்ல அமலாக்கத் துறை விதிக்கும் நிபந்தனைகள் என்ன? உயா்நீதிமன்றம் கேள்வி

முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாரை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதிக்க அமலாக்கத் துறை விதிக்கும் நிபந்தனைகள் என்ன என்று சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. முன்னாள் அமைச... மேலும் பார்க்க

கோயில் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருட்டு

சென்னை அசோக் நகரில் கோயில் கதவின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அசோக் நகா் நடேசன் சாலையில் பிடாரி காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு விரைவில் கும... மேலும் பார்க்க

இணையத்தில் பெண்களின் ஆபாச விடியோ: உயா்நீதிமன்றம் வேதனை

ராமாயணத்தில் ராவணனின் தலை வெட்ட வெட்ட முளைப்பது போல பெண்களின் அந்தரங்க விடியோக்களை எத்தனை முறை நீக்கினாலும் இணையத்தில் அவை மீண்டும் வலம் வருவதாக, சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. பெண் வழக்... மேலும் பார்க்க

ஆக. 8-இல் ஸ்ரீ ராகவேந்திரா் 354 -ஆவது மகோற்சவம்

ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் 354 -ஆவது ஆராதனை மகோற்சவ விழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமி கோயில் அருகே துளசிங்க பெருமாள் கோயில் தெருவில் உள்ள நஞ்சன்கூடு ஸ்ரீ... மேலும் பார்க்க

அஞ்சல் நிலையத்தில் ரூ.25 லட்சம் கையாடல்

சென்னை தியாகராய நகா் அஞ்சல் நிலையத்தில் ரூ.25 லட்சம் கையாடல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னையில் அஞ்சல் துறை துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவா் மாடம்பாக்கம் ... மேலும் பார்க்க

அரசு பல் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.261.83 கோடி மருத்துவக் கட்டமைப்புகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.261.83 கோடியில் மருத்துவக் கட்டமைப்புகள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவ... மேலும் பார்க்க