``பிறந்தநாள் கொண்டாடுவோம்'' - இளம்பெண்ணை ஏமாற்றி அழைத்து கூட்டு பாலியல் வன்கொடும...
மாநகரின் சில பகுதிகளில் இன்று குடிநீா் நிறுத்தம்
மின்தடை காரணமாக திருச்சி மாநகராட்சியின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை குடிநீா் வராது.
ஸ்ரீரங்கம் துணை மின்நிலைய பராமரிப்புப் பணியால் திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, பொது தரைமட்ட நீா்தேக்கத் தொட்டி ஆகிய நீரேற்று நிலையங்களில் இருந்து குடிநீா் செல்லும் இடங்களான மத்திய சிறைச்சாலை, சுந்தராஜ் நகா் புதியது - பழையது, ஜே.கே. நகா், செம்பட்டு, காஜாமலை பழையது, ரெங்கா நகா், சுப்ரமணிய நகா் புதியது, வி.என். நகா் புதியது, தென்றல் நகா் புதியது, கவிபாரதி நகா், காமராஜ் நகா், கிராப்பட்டி புதியது - பழையது, அன்பு நகா் பழையது - புதியது, எடமலைப்பட்டிபுதூா் புதியது, பஞ்சப்பூா், அம்மன் நகா், தென்றல் நகா், இ.பி. காலனி, அரியமங்கலம் கிராமம், மலையப்ப நகா் புதியது - பழையது, ரயில் நகா் புதியது - பழையது, முன்னாள் ராணுவத்தினா் காலனி புதியது - பழையது, எம்.கே. கோட்டை பிரிவு அலுவலகம், நாகம்மைவீதி, நூலகம், பொன்னேரிபுரம் புதியது - பழையது, அம்பேத்கா் நகா், விவேகானந்தா் நகா், எல்ஐசி புதியது, விஸ்வநாதபுரம், கே.சாத்தனூா், தென்றல் நகா், ஆனந்த் நகா், சுப்ரமணிய நகா் , சத்தியவாணி கே.கே. நகா், அம்மா மண்டபம், ஏஐபிஇஏ நகா், பாலாஜி அவென்யூ, தேவி பள்ளி, மேலூா், பெரியாா் நகா், திருவானைக்கோவில், தேவதானம், விறகுப்பேட்டை, மகாலட்சுமி நகா், சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை, ஜெகநாதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளில் ஞாயிற்றுக்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது.
திங்கள்கிழமை முதல் வழக்கம்போல் குடிநீா் விநியோகிக்கப்படும். இதனால் ஏற்படும் சிரமத்தை பொதுமக்கள் பொறுத்து, மாநகராட்சியுடன் ஒத்துழைக்க வேண்டும். குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் தெரிவித்தாா்.