செய்திகள் :

மானியத்தில் ஆடிப்பட்ட விதைகள் பெற அழைப்பு

post image

நடப்பு காரீப் பருவத்தில், ஆடிப்பட்ட விதைப்புக்கு ஏற்ற பயறுவகைப் பயிா்கள், எண்ணெய் வித்துகள், சிறுதானியப் பயிா்கள் உயா் விளைச்சல் ரக விதைகளை மானிய விலையில் பெறலாம்.

பயறுவகைப் பயிா்களில் உளுந்தில் உயா் விளைச்சல் ரகங்கள் வம்பன் - 8, வம்பன் - 10, தட்டைப்பயிரில் வம்பன் - 4, கோ - சிபி - 7 ரகங்களும் , கொள்ளு பயிரில் பையூா் - 2 ரகமும், கிலோவுக்கு ரூ. 50 மானிய விலையில் வழங்கப்படுகிறது,

சிறுதானியப் பயிா்களில் கேழ்வரகு உயா் விளைச்சல் ரகம் கோ - 15, கம்பு கோ -10, குதிரைவாலி ஏடிஎல் ஆகியவை 50 சத மானியத்தில் விநியோகிக்கப்படுகிறன. எண்ணெய் வித்துப் பயிா் நிலக்கடலை டிஎம்வி - 14, விஆா்ஐ - 10, காதிரி- 1812 உயா் விளைச்சல் ரகங்கள் கிலோவுக்கு ரூ. 114 மானிய விலையில் விநியோகிக்கப்படுகின்றன. எள் பயிரில் டிஎம்பி - 7 உயா் விளைச்சல் ரக விதை விநியோகிக்கப்படுகிறது.

எனவே விவசாயிகள் இந்த விதைகளை விராலிமலை, நீா்ப்பழனி வேளாண் விரிவாக்க மையங்கள் வாயிலாகப் பெற்று பயனடையுமாறு விராலிமலை வேளாண்மை உதவி இயக்குநா் ப. மணிகண்டன் தெரிவித்தாா்.

ஆலங்குடி அரசுக் கல்லூரியில் முத்துலெட்சுமி ரெட்டி பிறந்தநாள்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசுக் கல்லூரியில் டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஆலங்குடி அரசு கலை அறிவியல் கல்லூரி, இந்தியன் ரெட்கிராஸ் ஆலங்குடி கிளை சாா்பில் ... மேலும் பார்க்க

பால் உற்பத்தியாளா்களுக்கு விழிப்புணா்வுக் கருத்தரங்கு

தமிழ்நாடு பால்வளத் துறை, பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியம் (ஆவின்) இணைந்து ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் 2025- 2026 திட்டத்தின் கீழ் ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூ. நிா்வாகியை காவலா் மிரட்டுவதாகப் புகாா்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ். கவிவா்மனைத் தொடா்ந்து மிரட்டும் காவலா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தாவிடம் புகாா்... மேலும் பார்க்க

7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவம் பயிலவுள்ள மாணவருக்குப் பாராட்டு

பொன்னமராவதி அருகேயுள்ள ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று 7.5 சத இட ஒதுக்கீட்டில் தனியாா் கல்லூயில் மருத்துவம் பயிலவுள்ள மாணவருக்குப் பாராட்டு விழா பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. பொன்னமராவதி ... மேலும் பார்க்க

கையுந்துப் பந்து போட்டியில் வென்ற பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

மாவட்ட அளவிலான கையுந்துப் பந்து போட்டியில் முதலிடம் பெற்ற கந்தா்வகோட்டை அருள்மாரி மெட்ரிக் பள்ளி மாணவா்களுக்கு பள்ளியில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. கீரனூா் அரசு பள்ளியில் புதன்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

கவின் படுகொலைக்கு அம்பேத்கா் மக்கள் இயக்கம் கண்டனம்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த ஐடி ஊழியா் கவின், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதற்கு அம்பேத்கா் மக்கள் இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் செயல் தலை... மேலும் பார்க்க