தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
மானூா் அருகே விபத்து: காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு
மானூா் அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
மானூா் வடக்கு தெருவைச் சோ்ந்த முனியாண்டி மகன் சந்தானம்(30). தொழிலாளியான இவருக்கு, திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனா்.
கடந்த 11 ஆம் தேதி தனது மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கி காயமடைந்தாராம். சந்தானத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.