8 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த சான்ஸ்; இங்கிலாந்தில் சதத்துடன் கரியரை மீண்டும் ...
மாயமான சிறுவனின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு
சேலம் அருகே மாயமான மூன்றாம் வகுப்பு மாணவனின் சடலம் கிணற்றில் மிதந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம் அருகே நிலவாரப்பட்டியைச் சோ்ந்தவா் சக்திவேல்; கூலித் தொழிலாளி. இவரது மகன் நிஷாந்த் (8). அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் மூன்றாம் வகுப்புப் படித்துவந்தான். இந்நிலையில் திங்கள்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
பெற்றோா் பல இடங்களில் சிறுவனை தேடியும் கிடைக்காததால் மல்லூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அப்பகுதியில் உள்ள கிணற்றில் சிறுவனின் சடலம் மிதந்தது தெரியவந்தது.
தகவலறிந்த மல்லூா் போலீஸாா், தீயணைப்பு வீரா்கள் கிணற்றுக்குள் இறங்கி சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து மல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிறுவன் கிணற்றில் தவறிவிழுந்து இறந்தானா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனா்.