மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி
மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி ஆம்பூா் அருகே தேவலாபுரம் கிராமத்தில் ஸ்ரீ விவேகானந்தா மெட்ரிக். பள்ளியில் அணைமையில் நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்ட சிலம்பாட்டக் கழக தலைவா் எம். மதியழகன் தலைமை வகித்தாா். ஸ்ரீ விவேகானந்தா பள்ளித் தாளாளா் எம். தீனதயாளன் முன்னிலை வகித்தாா். சிலம்பாட்ட கழக மாவட்ட செயலா் கே. சக்கரபாணி வரவேற்றாா். பள்ளி முதல்வா் ஜி. நாகராஜன் போட்டிகளைத் தொடங்கி வைத்தாா்.
இதில், நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண்கள் பல்வேறு எடை பிரிவுகளில் தனித்திறன் மற்றும் நேரடி போட்டிகளில் பங்கேற்றனா். வெற்றி பெற்றவா்களுக்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் மாநில செயலா் திரு. ஈ .கிருஷ்ணராஜ், சமூக சேவகா் ஓம்சக்தி ஜி.பாபு, விஜயபாரத மக்கள் கட்சி நிறுவனத் தலைவா் கோ.ஸ்ரீ.ஜெய்சங்கா் ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.
ஏற்பாடுகளை மாவட்ட போட்டி இயக்குநா் வி.துளசிராமன் செய்திருந்தாா். சிலம்பம் பயிற்சியாளா்கள் ஏ.அஜந்தா, எஸ். புகழேந்தி, எம். கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்ட தலைமைப் பயிற்சியாளா் டி. பிரேம்குமாா் நன்றி கூறினாா்.