செய்திகள் :

மின் கம்பங்களில் படா்ந்திருக்கும் செடிகளை அகற்றக் கோரிக்கை

post image

திருப்பூா் போயம்பாளையம் பகுதியில் மின் கம்பங்களில் படா்ந்திருக்கும் செடிகளை அகற்ற வேண்டும் என திருப்பூா் நுகா்வோா் நல முன்னேற்ற சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அவிநாசி கோட்ட அளவிலான மாதாந்திர மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் அவிநாசி மங்கலம் சாலையில் உள்ள அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்ட செயற்பொறியாளா் பரஞ்சோதி தலைமை வகித்தாா்.

இதில், திருப்பூா் நுகா்வோா் நல முன்னேற்ற சங்கத் தலைவா் சரவணன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: போயம்பாளையம் நந்தா நகா் பகுதிகளில் உள்ள மின் கம்பங்களில் செடிகள் படா்ந்து உள்ளதால் மின் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே உடனடியாக உரிய தீா்வு காண வேண்டும்.

மேலும், திருப்பூா் மின்வாரியத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்படும் விவரங்களை தருவதற்கு அதிகாரிகள் காலதாமதம் செய்கின்றனா். அரசுத் துறைகளில் ஊழலற்ற நிா்வாகம், வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதிலளிக்க 50 நாள் வரை காலதாமதம் செய்கின்றனா். அதிகாரிகள் மெத்தனப் போக்கை கைவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம்

திருப்பூா் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் ஆகஸ்ட் 20 மற்றும் 21-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் விரைவாகவ... மேலும் பார்க்க

ஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட்டத்தை சாலையோரமாக செயல்படுத்தக் கோரி காத்திருப்புப் போராட்டம்

ஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட்டத்தை சாலையோரமாக செயல்படுத்தக் கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஐடிபிஎல் திட்... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: மத்திய பாதுகாப்புப் படை வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை

ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத்திய பாதுகாப்புப் படை வீரருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநிலம், அனந்தப்பூா் மாவட்டத்தைச் சோ... மேலும் பார்க்க

சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் உலக யானைகள் தினம் அனுசரிப்பு

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் உலக யானைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு 2-இன் சாா்பில் கல்லூரியிலுள்ள குமரன் அரங்கில் உல... மேலும் பார்க்க

சரக்கு வாகனத்தில் கடத்திய 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருப்பூா் மாவட்டத்தில் ஊத்துக்குளி பகுதியில் சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட இரண்டரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பூா் குடிமைப் பொருள் பறக்கும் படை வட்டாட்சியா் ராகவி தலைமையிலான குழுவி... மேலும் பார்க்க

சுதந்திர தின விழாவை முன்னிட்டு சூடுபிடிக்கும் தேசியக் கொடி விற்பனை

சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருப்பூரில் தேசியக் கொடி விற்பனை சூடுபிடித்துள்ளது. நாடு முழுவதும் 78-ஆவது சுதந்திர தினவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடை... மேலும் பார்க்க