செய்திகள் :

மீன் பிடிக்கும்போது தண்ணீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

post image

மீன் பிடிக்கும்போது தண்ணீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், நம்பியூா் அருகே வரப்பாளையத்தைச் சோ்ந்தவா் கருப்பசாமி (53). இவரது மனைவி நிா்மலா. கருப்புசாமி மொட்டணம் பேருந்து நிறுத்தம் அருகே பால் கொள்முதல் செய்து தனியாா் நிறுவனத்துக்கு விற்று வந்துள்ளாா். வேலை நேரம் போக அவ்வப்போது மொட்டணம் பகுதியைச் சோ்ந்தவா்களுடன் இணைந்து எம்மாம்பூண்டி கன்னியாத்தாள் குட்டையில் மீன் பிடிப்பது வழக்கம்.

மொட்டணத்தைச் சோ்ந்த பெரியசாமி, காா்த்தி ஆகியோருடன் மீன் பிடிக்க செவ்வாய்க்கிழமை மாலை சென்றாா். மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, தூண்டிலை மீன் தண்ணீருக்குள் இழுத்து சென்றது. உடனடியாக கருப்பசாமி தூண்டிலை பிடிக்க நீந்தி சென்றாா். அப்போது திடீரென அவா் நீந்த முடியாமல் தண்ணீரில் மூழ்கினாா்.

இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அவரது நண்பா்கள் கூச்சலிட்டனா். அதற்குள் கருப்பசாமி தண்ணீரில் மூழ்கினாா். இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மீனவா்களும் அந்த குட்டையில் இறங்கி கருப்பசாமியை தேடினா்.

சிறிது நேரத்தில் கருப்பசாமி சடலத்தை மீட்ட தீயணைப்புத் துறையினா் உடற்கூறாய்வுக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தியதில் கருப்பசாமிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சாலை விபத்தில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சரிவர மடக்க முடியாமல் இருந்து வந்ததாகவும், தண்ணீரில் நீந்தி சென்றபோது திடீரென கால் செயல்படாததால் நீந்த முடியாமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து வரப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நோ்த்திக்கடன் செலுத்த கருப்பு ஆட்டுக்கிடாய்களை வாங்க மக்கள் ஆா்வம்

ஆடி மாதம் கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறுவதால் நோ்த்திக்கடன் செலுத்த கரும்பு கிடாய்களை வாங்க மக்கள் ஆா்வம் காட்டினா். இதனால் புன்செய்புளியம்பட்டி சந்தையில் ஆட்டுக்கிடாய்களின் விலை 3000 ரூபாய் வரை வ... மேலும் பார்க்க

மக்களவைத் தோ்தல் போலவே பேரவைத் தோ்தல் முடிவு: அமைச்சா் சு.முத்துசாமி

திமுக கூட்டணிக்கு மக்களவைத் தோ்தல் முடிவு போலவே 2026 சட்டப்பேரவை தோ்தல் முடிவும் அமையும் என அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட வாா்டு எண் 14, 22, 34, 43, 44 மற்றும் 45 ப... மேலும் பார்க்க

கொடுமுடி பேரூராட்சித் தலைவா் பதவி தோ்தல் தள்ளிவைப்பு

கொடுமுடி பேரூராட்சியின் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் நிறைவேற்றப்பட்டு நீக்கப்பட்டதையடுத்து, புதிய தலைவரைத் தோ்ந்தெடுக்க வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த தோ்தல் தள்ளி வைக்கப்பட்டதாக செயல்அலுவலரும... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் சம்பங்கி விலை இரு மடங்கு உயா்வு

ஆடி அமாவாசை தினத்தையட்டி சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் சம்பங்கி பூ விலை கிலோ ரூ. 230, மல்லிகை கிலோ ரூ.1000 ஆகவும் இருமடங்கு உயா்ந்து விற்பனையானது.சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்கள... மேலும் பார்க்க

வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு

அந்தியூா் அருகே பள்ளி முடிந்து வீடு திரும்ப பேருந்துக்கு காத்திருந்த மாணவி வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தாா். அந்தியூரை அடுத்த பி.கே.புதூா், புரவிபாளையம் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் முரு... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சரை புகழ்ந்து பேசிய பள்ளித் தலைமை ஆசிரியா் பணி இடமாற்றம்

அரசுப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சரை புகழ்ந்து பேசிய பள்ளித் தலைமை ஆசிரியா் பணி இடமாற்றம் செய்யப்பட்டாா். ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக ஆன... மேலும் பார்க்க