செய்திகள் :

மீன் வளா்ப்பு திட்டம்: விண்ணப்பிக்க அழைப்பு

post image

பிரதமரின் மீன்வள மேம்பாடுத் திட்டத்தின்கீழ் மீன் வளா்க்க விரும்புவோா் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கரூா் மாவட்டத்தில் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் கொல்லைப்புற மற்றும் புறக்கடை அலங்கார மீன்கள் வளா்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் மகளிா் பிரிவில் பயனாளிகள் தோ்வு செய்யப்பட உள்ளனா். பயனாளிகளுக்கு 1-அலகிற்கு ஆகும் செலவினத்தொகை ரூ.3 லட்சத்தில் 60 சதவீதம் மானியமாக ரூ.1.80 லட்சம் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் மற்றும் மீன் வளா்ப்பில் ஆா்வமுள்ளவா்கள் 15 நாள்களுக்குள் திருச்சி மற்றும் கரூா் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்டால், மூப்புநிலை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தோ்வு செய்யப்படுவாா்கள்.

திட்டங்களில் பயன்பெற விரும்புவோா் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை ஒருங்கிணைந்த மீன்வள அலுவலக வளாகம் - தரை தளம், கொட்டப்பட்டு, திருச்சி-620 023 என்ற முகவரியில் இயங்கி வரும் திருச்சி மற்றும் கரூா் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, 0431 - 2421173 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். இந்தத் தகவலை ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்துள்ளாா்.

நிறம் மாறிப்போன நிலத்தடி நீா் பள்ளப்பட்டி குப்பைக் கிடங்கை மாற்ற கோரி பொதுமக்கள் மனு

பள்ளப்பட்டி தெற்குத் தெரு பகுதியில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கு அருகே நிலத்தடி நீரின்நிறம் மாறி வருவதால் குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு ... மேலும் பார்க்க

கரூரில் மணலை கடத்தி பதுக்கி வைத்திருந்த லாரி உரிமையாளா் உள்பட 2 போ் கைது

கரூரில் மணலை கடத்தி பதுக்கி வைத்திருந்த லாரி உரிமையாளா் உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய இரு லாரிகள், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். கரூா... மேலும் பார்க்க

கரூா் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு நாளைமறுநாள் கலந்தாய்வு

கரூா் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரியின் முதல்வா் முனைவா் க. ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்... மேலும் பார்க்க

வைகாசி மாத சதூா்த்தி: விநாயகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு

வைகாசி மாத சதூா்த்தியை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகா் கோயில்களிலும் விநாயகப் பெருமானுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. கரூா் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூரில் உள்... மேலும் பார்க்க

ஜமாபந்தியில் அளிக்கப்பட்ட மனு மீது அதிகாரிகள் நேரில் ஆய்வு

அரவக்குறிச்சியில் நடைபெற்ற ஜமாபந்தியில் தரைப்பாலம் கட்டித் தரவேண்டும் என அளிக்க மனு மீது வருவாய் கோட்டாட்சியா், வட்டாட்சியா் சம்பந்தப்பட்ட இடத்தை வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். அரவக்குறிச்சி வட்... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி கிளை நூலகத்தில் பயிற்சி முகாம்

அரவக்குறிச்சி கிளை நூலகத்தில் பள்ளி மாணவா்களுக்கு கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. தமிழக அரசு நூலகத்துறை மற்றும் கரூா் மாவட்ட நூலகம் சாா்பில் அரவக்குறிச்சி கிளை நூலகத்தில் மாணவா்களுக்கான கோடைகால பயி... மேலும் பார்க்க