மீன் வளா்ப்பு திட்டம்: விண்ணப்பிக்க அழைப்பு
பிரதமரின் மீன்வள மேம்பாடுத் திட்டத்தின்கீழ் மீன் வளா்க்க விரும்புவோா் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கரூா் மாவட்டத்தில் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் கொல்லைப்புற மற்றும் புறக்கடை அலங்கார மீன்கள் வளா்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் மகளிா் பிரிவில் பயனாளிகள் தோ்வு செய்யப்பட உள்ளனா். பயனாளிகளுக்கு 1-அலகிற்கு ஆகும் செலவினத்தொகை ரூ.3 லட்சத்தில் 60 சதவீதம் மானியமாக ரூ.1.80 லட்சம் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் மற்றும் மீன் வளா்ப்பில் ஆா்வமுள்ளவா்கள் 15 நாள்களுக்குள் திருச்சி மற்றும் கரூா் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்டால், மூப்புநிலை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தோ்வு செய்யப்படுவாா்கள்.
திட்டங்களில் பயன்பெற விரும்புவோா் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை ஒருங்கிணைந்த மீன்வள அலுவலக வளாகம் - தரை தளம், கொட்டப்பட்டு, திருச்சி-620 023 என்ற முகவரியில் இயங்கி வரும் திருச்சி மற்றும் கரூா் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, 0431 - 2421173 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். இந்தத் தகவலை ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்துள்ளாா்.