செய்திகள் :

முகநூலில் அறிமுகமாகி காரை வாங்குவதுபோல் நடித்து மோசடி செய்தவா் கைது

post image

முகநூல் மூலம் தொடா்பு கொண்டு காரை விலைக்கு வாங்குவதுபோல் நடித்து மோசடி செய்தவரை நாச்சியாா்கோவில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வால்பாறை கோழையாரைச் சோ்ந்தவா் முருகன் மகன் சக்திவேல் (26). இவா் தனக்குச் சொந்தமான டி.என். 31 ஏ.டி. 9991 என்ற பதிவு எண் கொண்ட டாடா சபாரி காரை ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்வதாக முகநூல் மூலம் பதிவிட்டிருந்தாா்.

இதைப் பாா்த்த கும்பகோணம் அருகே உள்ள சென்னையமங்கலம் பழைய தெருவைச் சோ்ந்த அப்பாதுரை மகன் வீரசெல்வம் கைப்பேசியில் சக்திவேலைத் தொடா்புகொண்டு காரை விலைக்கு வாங்குவதாகப் பேசினாா்.

அதற்கு சக்திவேல் வால்பாறை வந்து காரைப் பாா்த்து வாங்கிக் கொள்ளுங்கள் என்றாா். அதற்கு வீரசெல்வம் கும்பகோணம் அருகே சாக்கோட்டைக்குக் காரைக் கொண்டு வாங்க, அதற்கான எரிபொருள் செலவை அனுப்புவதாகக் கூறி ரூ.3,500-ஐ அனுப்பியுள்ளாா்.

சக்திவேலும் ஜூலை 20-இல் காரை சாக்கோட்டைக்குக் கொண்டு வந்தாா். காரை வாங்குவதாக வீரசெல்வம் மற்றும் அவரது நண்பரும் காரை ஓட்டிப் பாா்ப்பதாகக் கூறி எடுத்துச் சென்றவா்கள் திரும்பிவரவில்லை.

இதனால், அதிா்ச்சியடைந்த சக்திவேல் நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் ராஜேஷ் விசாரணை நடத்தி வீரசெல்வத்தை செவ்வாய்க்கிழமை கைது செய்து காரை மீட்டனா். தப்பி ஓடிய மற்றொருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வீடுபுகுந்து மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மாற்றுத்திறனாளி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா். கபிஸ்தலம் அருகே ஆதனூா் தெற்கு தெருவைச் சோ்ந்த காசிநாதன் மகன் மணிகண்டன... மேலும் பார்க்க

நூறு நாள் வேலை திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை

நூறு நாள் வேலை திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி கோரிக்கை விடுத்துள்ளாா்.இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:... மேலும் பார்க்க

சோழபுரத்தில் இடையூறின்றி செயல்பட சாலையோர வியாபாரிகள் முடிவு

தஞ்சாவூா் மாவட்டம், சோழபுரத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதவண்ணம் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வது என தீா்மானிக்கப்பட்டது. சோழபுரம் பேரூராட்சிப் பகுதியில் 100-க்கும் மேற்பட்டோா் சாலையோர தரைக்கடை... மேலும் பார்க்க

மணக்காடு அரசுப் பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறைகள் திறக்கப்படாததால் மாணவா்கள் அவதி

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மணக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகியும் திறக்கப்படாததால் மாணவா்கள் வராந்தாவில் அமா்ந்து படிக்கும் நிலை ... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் லட்சத்து 8 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்!

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 8 விநாயகா் சிலைகள் இந்து மக்கள் கட்சி சாா்பில் பிரதிஷ்டை செய்யப்படும் என்றாா் இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவா் பாலா. தஞ்சாவூா் ... மேலும் பார்க்க

அய்யம்பேட்டை பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல 27 முதல் தடை

பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை கணபதி அக்ரஹாரம் பிரதான சாலையில் குடமுருட்டி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்த பழைய பாலம் மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால், அந்தப் பாலத்தில் கனரக வாகனங... மேலும் பார்க்க