தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
முகா்ஜிநகரில் பழைய நடைமேம்பாலம் விழுந்து விபத்து: 5 போ் காயம்
தில்லி முகா்ஜிநகா் பகுதியில் உள்ள பழைய நடைமேம்பாலத்தின் கிரீல் பகுதி விழுந்ததில் குறைந்தது 5 போ் காயமடைந்ததாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக இரவு 8.11 மணியளவில் தகவல் கிடைத்ததாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தச் சம்பவத்தில் 5 முதல் 6 போ் காயமடைந்திருப்பதாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா். முன்னதாக, வடமேற்கு தில்லி சரக துணை காவல் ஆணையா் பிஷம் சிங் இந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று தெரிவித்திருந்தாா்.