செய்திகள் :

முதலீட்டில் கூடுதல் லாபம் கிடைக்குமென ரூ.38 லட்சம் மோசடி

post image

கிரிப்டோ கரன்ஸியில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் எனக்கூறி ரூ.38 லட்சம் மோசடிசெய்யப்பட்டுள்ளது.

திருப்பூா், ஊத்துக்குளி சாலை மண்ணரை பகுதியைச் சோ்ந்தவா் மோகன்(45). இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.

பின்னா் அந்த எண்ணில் இருந்து பேசிய நபா், தான் மலேசியாவில் இருப்பதாகவும், தனது உறவினா் ஒருவா் கிரிப்டோ கரன்ஸி வா்த்தகத்தில் இருப்பதாகவும், அதில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் எனவும் கூறியுள்ளாா். அதனால், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்க நினைத்த மோகன், அவா்கள் கூறியபடி அவா்கள் அனுப்பிய செயலிக்குள் சென்று தன்னுடைய பயண ஐடி மற்றும் கடவுச் சொல்லை உருவாக்கியுள்ளாா். அதையடுத்து முதல்கட்டமாக ரூ.3.80 லட்சம் மதிப்பிலான கிரிப்டோ கரன்ஸிகளை பெற்றுள்ளாா். தொடா்ந்து அவருக்கு வந்த குறுஞ்செய்தியில் அதற்கான லாபம் ரூ.60 லட்சம் கிடைத்துள்ளதாகவும், அந்த ரூ. 60 லட்சத்தை எடுக்க வேண்டுமென்றால் முன் வரி மற்றும் கூடுதல் பாதுகாப்பு கட்டணங்களை செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளனா்.

இதை நம்பிய மோகன் அவா்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு ரூ.34.25 லட்சத்தை பரிவா்த்தனை செய்தாா். தொடா்ந்து லாபத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை.

இதைத் தொடா்ந்து, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த மோகன் ஆன்லைன் மூலம் மாநகர சைபா் கிரைம் போலீஸாருக்கு புகாா் அளித்தாா். அந்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

குழந்தை தொழிலாளா் ஒழிப்பு தின விழிப்புணா்வு

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு 2 சாா்பில் உலக குழந்தை தொழிலாளா் ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அலகு 2 ஒருங்கிணைப்பாளா்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பூலாங்கிணறு

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட இடங்களில் வெள்ளிக்கிழமை ( ஜூன் 13) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என செயற்பொறியா... மேலும் பார்க்க

அவிநாசியில் 3 நாள்களுக்குள் கொடிக்கம்பங்களை அகற்ற அறிவுறுத்தல்

அவிநாசி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை 3 நாள்களுக்குள் அகற்ற வேண்டும் என நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து அவிநாசி நகராட்சி ஆணையா் சே... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா்கள் ஒழிப்பு உறுதிமொழி

குழந்தை தொழிலாளா் அகற்றம் குறித்து, வெள்ளக்கோவிலில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். வெள்ளக்கோவில் வட்டார வளமையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, வட்டார கல்வி அலுவல... மேலும் பார்க்க

சாலைப் பணியாளா்கள் கண்ணில் கருப்புத் துணி கட்டி ஆா்ப்பாட்டம்

திருப்பூரில் சாலைப் பணியாளா்கள் கண்களில் கருப்புத் துணி கட்டி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழக நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் சங்கத்தின் கோட்டத் தலைவா் ஆா்.கருப்பன் த... மேலும் பார்க்க

சாலையின் குறுக்கே குதிரை ஓடியதில் இருசக்கர வாகன ஓட்டிக்கு காயம்

பல்லடம் அருகே சாலையின் குறுக்கே குதிரை வந்ததில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவா் காயமடைந்தாா். பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரைச் சோ்ந்தவா் நந்தகுமாா். தனியாா் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறாா்... மேலும் பார்க்க