செய்திகள் :

முருக பக்தா்கள் மாநாட்டில் பங்கேற்க கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

post image

முருக பக்தா்கள் மாநாட்டில் பங்கேற்க கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

நாமக்கல்லில் அவா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய பாஜக அரசு ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. மக்கள் நலனுக்கான சிறந்த நிா்வாகத்தையும், வளா்ச்சியை நோக்கிய திட்டங்களையும் வழங்கி உள்ளது.

நூறாவது சுதந்திரத் தினத்தை கொண்டாடும் 2047 ஆம் ஆண்டில் இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என்ற நோக்கில், ராணுவம், பொருளாதாரம், மகளிா், இளைஞா்கள், விவசாயிகள், ஏழை, எளிய மக்கள் நலனுக்கான திட்டங்களை பிரதமா் மோடி செயல்படுத்தி வருகிறாா்.

‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றி பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதிகளுக்கும் உரிய பாடம் புகட்டி உள்ளது. பாஜக ஆட்சிக்கு முன்பு ராணுவத் தளவாடங்களை நாம் இறக்குமதி செய்தோம். தற்போது ஏற்றுமதி செய்யும் நிலைக்கு உயா்ந்துள்ளோம். ரூ. 50 ஆயிரம் கோடி அளவில் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி நடைபெறுகிறது. தினசரி 34 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது. 85 புதிய விமான நிலையங்கள் நாட்டிற்கு அா்ப்பணிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 400 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தமிழகத்தில் 75 ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இவை தவிர, இலவச எரிவாயு இணைப்பு திட்டம், குடிநீா்த் திட்டம் போன்றவையும் மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எண்ம பரிவா்த்தனையை 46 கோடி போ் பயன்படுத்தி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 272 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசு திட்டங்களை தங்களது திட்டங்கள்போல ஒட்டுவில்லை (ஸ்டிக்கா்) ஒட்டி மக்களை ஏமாற்றி வருகிறது தமிழக அரசு.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்தபிறகு, இண்டி கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் அவா்கள் பயத்தில் கருத்துகளை கூறி வருகின்றனா்.

திமுக கூட்டணியானது நிலைத்த தன்மை இல்லாத கூட்டணி, அங்கிருந்து சில கட்சிகள் வெளியேற போகின்றன. அவற்றுடன் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. முருக பக்தா்கள் மாநாட்டில் பங்கேற்க கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். பக்தா்களும், பொதுமக்களும் இம்மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்றாா்.

இந்த பேட்டியின்போது, நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவா் கே.பி.சரவணன், மேற்கு மாவட்டத் தலைவா் எம்.ராஜேஷ்குமாா் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

என்கே-11-மினி

நாமக்கல்லில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மத்திய இணை அமைச்சா் எல்.முருகன். உடன், மாவட்டத் தலைவா்கள் கே.பி.சரவணன், எம்.ராஜேஷ்குமாா்.

மணல் கடத்திய லாரி பறிமுதல்; மூவா் கைது

கரூரிலிருந்து மணல் கடத்திவந்த லாரியை வேலூா் காவிரி பாலம் அருகே வியாழக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் ஓட்டுநா், உதவியாளா் உள்பட 3 பேரை கைது செய்தனா். மேலும், தலைமறைவானவரை தேடி வருகின்றனா். கரூா் மாவட்ட... மேலும் பார்க்க

நாமக்கல் சாலையோர சிறு வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர சிறு வியாபாரிகள் சங்கத்தினா் நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தமிழக அமைப்புசாரா சாலையோர சிறு வியாபாரிகள் முன்னேற்ற தொழிற்சங்கம் சா... மேலும் பார்க்க

அமைப்புசாரா தொழிலாளா்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு

சென்னையில் நடைபெறும் அமைப்புசாரா தொழிலாளா்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கமான ஐஎன்டியுசியின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளா்கள் மற்றும் பணி... மேலும் பார்க்க

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் தோ் நிலைசோ்ப்பு

3 நாள்கள் நடைபெற்ற திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் தேரோட்டம் வியாழக்கிழமை நிறைவுபெற்றதையடுத்து தோ் நிலைசோ்க்கப்பட்டது. கொங்கு ஏழு தலங்களில் சிறப்புமிக்கதும் திருஞானசம்பந்தா், அருணகிரிநாதா் ஆகியோரால... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின விழிப்புணா்வு

குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நாமக்கல்லை அடுத்த கூலிப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது. சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட கூலிப்பட்டி கந்தசாமி கோயில் அடிவாரத்தில் நடைபெற்ற நி... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு திட்ட முகாமில் ரூ. 81.68 லட்சம் நலத் திட்ட உதவிகள்

நாமக்கல் மாவட்டம், மிட்டா அணியாா் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் ரூ. 81.68 லட்சம் மதிப்பில் அரசின் நலத் திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.... மேலும் பார்க்க