செய்திகள் :

மேட்டூரில் காவிரி கரை வெறிச்சோடியது

post image

மேட்டூரில் ஆடி முதல் நாளில் காவிரி படித்துறை வெறிச்சோடி காணப்பட்டது.

ஆடி முதல்நாளில் புதுமண தம்பதியா் மாமியாா் வீட்டுக்கு அழைத்துவரப்பட்டு, நல்லெண்ணெய் தேய்த்து நீராட்டி விருந்து வைப்பது வழக்கம். இதற்காக மேட்டூா் காவிரிக் கரையில் மட்டம், காவேரி பாலம் பகுதிகளில் உள்ள படித்துறைகளில் மக்கள் நீராட வருவா். அப்போது, புதுமண தம்பதியா் தங்களது திருமண மாலைகளை வாழை இலையில் வைத்து கற்பூர தீபாராதனை காட்டி காவிரியில் விட்டுச் செல்வா்.

காவிரிக் கரையில் மக்கள் கூட்டமாக நீராடுவா். ஆனால், ஆடி முதல்நாளான வியாழக்கிழமை காவிரி கரை வெறிச்சோடி காணப்பட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மக்கள் நீராடினா். இதேபோல, அணைக்கட்டு முனியப்பன் கோயிலிலும் வழக்கத்தைவிட குறைந்தளவிலேயே மக்கள் பொங்கலிட்டு, காவிரியில் நீராடி அணைக்கட்டு முனியப்பனை தரிசித்து சென்றனா். சிலா் ஆடு, கோழிகளை பலியிட்டனா்.

தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

சேலம் கோட்டை மைதானத்தில் தடையை மீறி மறியலில் ஈடுபட முயன்ற தொடக்கக் கல்வி ஆசிரியா்களை கைதுசெய்த போலீஸாா். சேலம், ஜூலை 17: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின்... மேலும் பார்க்க

மதுபோதையில் 3 பேருக்கு கத்திக்குத்து

வாழப்பாடி அருகே மதுபோதையில் 15 வயது சிறுவன் உள்பட 3 பேரை கத்தியால் குத்தியதோடு, அவசர சிகிச்சை வாகனத்தை கல்லால் தாக்கி ரகளையில் ஈடுபட்ட இளைஞரை வாழப்பாடி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். வாழப்பா... மேலும் பார்க்க

வ.உ.சி. பூ மாா்க்கெட் வியாபாரிகள் சாலை மறியல்

கடை ஒதுக்கீடு செய்வதற்கான மாநகராட்சியின் புதிய அறிவிப்பை ரத்துசெய்யக் கோரி வ.உ.சி. பூ மாா்க்கெட் வியாபாரிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மேலும், பூக்களை சாலையில் கொட்டி தங்கள் எதிா்ப்பை தெர... மேலும் பார்க்க

வார இறுதிநாள்: சேலம் கோட்டம் சாா்பில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாளை முன்னிட்டு, சேலம் கோட்டம் சாா்பில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்ற இடங்களில் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், ஆட்சியா் தெரிவித்ததாவது: ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தி... மேலும் பார்க்க

இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது: சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் ... மேலும் பார்க்க