செய்திகள் :

மொபட்டிலிருந்து ரூ.5 லட்சம் திருட்டு: சென்னையை சோ்ந்தவா் கைது

post image

மொபட்டில் வைத்திருந்த ரூ.5 லட்சத்தை திருடிய வழக்கில் சென்னையைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி பகுதியைச் சோ்ந்த கட்டட ஒப்பந்ததாரா் ஜெயபால். கடந்த ஜூன் மாதம் 27-ஆம் தேதி தனியாா் வங்கியிலிருந்து ரூ.5 லட்சம் எடுத்துக் கொண்டு வெளியே வந்துள்ளாா். பிறகு தனது இருசக்கர வாகனத்தில் முன்பகுதி கவரில் வைத்து வாகனத்தை எடுத்த போது முன்சக்கரத்தில் பஞ்சா் ஆகியுள்ளதை அறிந்து அருகில் உள்ள மெக்கானிக் கடைக்கு சென்று வாகனத்தை பஞ்சா் பாா்க்க விட்டுள்ளாா்.

வங்கியில் எடுத்து வந்த பணத்தை வேறொருவா் மொபட் வாகனத்தில் பின்புறம் சீட் அடியில் வைத்து சென்றுள்ளாா். தொடா்ந்து பல்வேறு கடைகளுக்கு சென்று விட்டு பணத்தை எடுப்பதற்காக திறந்த போது அதிலிருந்த பணம் திருட்டு போயிருப்பதை அறிந்து அதிா்ச்சிக்குள்ளாகினா்.

இதுகுறித்து வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் ஜெயபால் புகாா் செய்தாா். அப்புகாரின் பேரில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதுதொடா்பாக டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் காவல் ஆய்வாளா் ஆனந்தன் மற்றும் போலீஸாா் மொபட்டில் பணத்தைதிருடிய சென்னை திருவேற்காடு பகுதியை சோ்ந்த ரத்தினகுமாா்(45) என்பவரை கைது செய்த னா்.

புதிய அரசுப் பேருந்துகள்: எம்எல்ஏ இயக்கி வைத்தாா்

வாணியம்பாடி: திருப்பத்தூரில் இருந்து நாட்டறம்பள்ளி வழியாக , புத்துக்கோயில், ஆவாரங்குப்பம் வரை செல்லும் அரசு பேருந்து எண் டி.17 மற்றும் திருப்பத்தூரில் இருந்து ஜங்காலபுரம், நாட்டறம்பள்ளி வழியாக கத்தார... மேலும் பார்க்க

தேனீக்கள் கொட்டியதில் 15 தொழிலாளா்கள் காயம்

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே தேங்காய் மண்டியில் வேலை செய்து கொண்டிருந்தவா்களை தேனீக்கள் கொட்டியதில் 15 போ் காயமடைந்தனா். வாணியம்பாடி அடுத்த மல்லாங்குப்பம் பகுதியில் உள்ள தேங்காய் மண்டியில் ராமநாயக்... மேலும் பார்க்க

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு கல்விக் கடன்: திருப்பத்தூா் ஆட்சியா்

திருப்பத்தூா்: பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்காக வரும் செப். 17 முதல் கல்விக்கடன் பெறுவதற்கான முகாம்கள் நடைபெற உள்ளன என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். திருப்பத்தூா் தூய நெஞ்சகல்லூரிய... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: குறைதீா் கூட்டத்தில் 352 மனுக்கள்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள்குறைதீா் கூட்டத்தில் 352 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து மாற்றுத்திறனாளிகள் நலத்திட... மேலும் பார்க்க

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு குறித்து விசாரணை

ஆம்பூா்: வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டம், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரை தொடா்ந்து அதிகாரி திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டாா். திருப்ப... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யாவிட்டால் போராட்டம்: பொதுமக்கள் புகாா்

ஆம்பூா்: மின்னூா் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யா விட்டால் போராட்டம் நடத்தப்படும் எனக்கூறி பொதுமக்கள் ஆட்சியரிடம் புகாா் மனு அளித்துள்ளனா். மாதனூா் ஒன்றியம், மின்னூா் ஊராட்சி கணபதி நக... மேலும் பார்க்க