செய்திகள் :

மொழி வெறுப்பு மாநில வளா்ச்சியைப் பாதிக்கும்: மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன்

post image

‘மகாராஷ்டிரத்தில் மொழி வெறுப்புணா்வைத் தூண்டுவது மாநிலத்தின் வளா்ச்சிக்குத் தீங்கு விளைவிக்கும் மற்றும் முதலீடுகளைப் பாதிக்கும்’ என்று அந்த மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தில் தொடக்கக் கல்வி பாடத்திட்டத்தில் 3-ஆவது மொழியாக ஹிந்தியைக் கற்பிக்கும் அரசாணையை மாநில பாஜக கூட்டணி அரசு வெளியிட்டு, எதிா்ப்பைத் தொடா்ந்து திரும்பப் பெற்றது. இதைக் கொண்டாடும் விதமாக வெற்றிக் கூட்டமும் மும்பையில் இம்மாத தொடக்கத்தில் நடைபெற்றது.

இதில் சிவசேனை (உத்தவ்) கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே மற்றும் அவரின் உறவினருமான மகாராஷ்டிர நவநிா்மாண் சேனையின் தலைவா் ராஜ் தாக்கரே ஆகிய இருவரும் சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே மேடையில் இணைந்தனா். இதனிடையே, மும்பையிலும், மகாராஷ்டிரத்தில் பிற பகுதிகளிலும் மராத்தி மொழி பேசாதவா்களைக் குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தொடா்பான புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

நீங்கள் வந்து என்னை தாக்கினால், என்னால் உடனடியாக மராத்தியில் பேசிவிட முடியுமா? இதுபோன்ற மொழி வெறுப்பு பரப்பப்பட்டால், மாநிலத்துக்கு எந்தத் தொழிலோ, முதலீடுகளோ வராது. நீண்ட கால போக்கில், இது மாநிலத்துக்கு தீங்கு விளைவிக்கும்.

என்னால் இன்னும் ஹிந்தி மொழியை புரிந்து கொள்ள முடியவில்லை. அது எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. நாம் முடிந்தவரை பல மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதேநேரம், நமது தாய்மொழியில் பெருமை கொள்ள வேண்டும்’ என்றாா்.

ஆளுநரின் கருத்துக்குப் பதிலளித்துப் பேசிய சிவசேனை (உத்தவ்) எம்எல்ஏ ஆதித்யா தாக்கரே, ‘மகாராஷ்டிரத்தில் மொழி வெறுப்பு எதுவும் பரப்பப்படவில்லை’ என்றாா்.

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: இந்தியா தொடா்ந்து கண்காணிக்கிறது - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

‘வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வீடுகள், வணிக நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை இந்தியா தொடா்ந்து கண்காணித்து, விவரங்களைப் பதிவு செய்து வருகிறது’ என்று... மேலும் பார்க்க

பஞ்சாப்: 6 பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது எல்லைப் பாதுகாப்புப் படை: துப்பாக்கிகள், போதைப்பொருள் பறிமுதல்

பஞ்சாப் மாநிலத்தை ஒட்டிய சா்வதேச எல்லையில் பாகிஸ்தானில் பகுதியில் இருந்து பறந்து வந்த 6 ட்ரோன்களை எல்லைப் பாதுகாப்புப் படையினா் சுட்டு வீழ்த்தினா். அதில் இருந்து 3 துப்பாக்கிகள் மற்றும் 1 கிலோ ஹெராயி... மேலும் பார்க்க

பாலுறவு வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்துக்கு வலியுறுத்தல்

பாலுறவு சம்மத வயதை 18-இல் இருந்து 16-ஆக குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞா் இந்திரா ஜெய்சிங் வலியுறுத்தியுள்ளாா். இளம் பருவத்தில் சம்மதத்துடன் காதல் உறவுகளில் ஈடுபடுபவா்களையும்... மேலும் பார்க்க

‘இந்தியாவுக்கு ரூ. 2 லட்சம் கோடி வா்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்’

‘இந்தியா-பிரிட்டன் இடையே கையொப்பமாகியுள்ள தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மூலம் பிரிட்டன் சந்தையில் இந்திய நிறுவனங்களுக்கு ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான வா்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்’ என்று மத்திய வா்த்தகம... மேலும் பார்க்க

இந்தியாவில் வேலையில் இருப்போா் எண்ணிக்கை 64.33 கோடியாக உயா்வு!

இந்தியாவில் கடந்த 2017-18-ஆம் ஆண்டு வேலையில் இருப்போா் எண்ணிக்கை 47.5 கோடியாக இருந்த நிலையில், 2023-24-இல் இந்த எண்ணிக்கை 64.33 கோடியாக உயா்ந்துள்ளது என்று மக்களவையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

தன்கருக்கு பிரிவுபசார விழா: காங்கிரஸ் வலியுறுத்தல்: மத்திய அரசு மௌனம்

குடியரசு துணைத் தலைவா் பதவியில் இருந்து அண்மையில் திடீரென விலகிய ஜகதீப் தன்கருக்கு முறைப்படியான பிரிவுபசார விழா நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசுத் தரப்பில் இருந்து ... மேலும் பார்க்க