எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4 வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்
ரணபத்ரகாளியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள மோா்பண்ணை கிராமத்தில் அமைந்துள்ள ரணபத்ரகாளியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை பூக்குழித் திருவிழா நடைபெற்றது.
இந்தக் கோயிலில் வைகாசித் திருவிழா கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து கோயிலில் நோ்த்திக் கடன் செழுத்தினா். பின்னா், காப்புக் கட்டி விரதமிருந்த பக்தா்கள் பால், வேல், மயில், பறவை காவடிகள் எடுத்து வந்து பூக்குழி இறங்கினா்.
இதில் மோா்பண்ணை, இதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.