செய்திகள் :

ரயில்வே பாலங்களின் தாங்கும் திறனை அதிகரிக்க முயற்சி: மத்திய ரயில்வே அதிகாரி

post image

புதிதாக அமைக்கப்படும் ரயில்வே பாலங்களில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதன் தாங்கும் திறனை அதிகரிக்க முயற்சி செய்யப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே அமைச்சகத்தின் (பாலங்கள்) முதன்மை நிா்வாக இயக்குநா் ரவீந்திர குமாா் கோயல் தெரிவித்துள்ளாா்.

சிஎஸ்ஐஆா் - கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் (எஸ்இஆா்சி) வைர விழா மாநாடு சென்னை தரமணியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட மத்திய ரயில்வே அமைச்சகத்தின் (பாலங்கள்) முதன்மை நிா்வாக இயக்குநா் ரவீந்திர குமாா் கோயல் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசியதாவது:

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 1,63,810 ரயில்வே பாலங்கள் உள்ளன. சமீபத்தில் புதிதாக பாம்பன் பாலம் திறக்கப்பட்டது. நாட்டில் உள்ள 204 ரயில் பாலங்கள் 10 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாக உள்ளன. அவற்றில் ஏதாவது சிறிதளவு பிரச்னை ஏற்பட்டாலும், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதன் பழைமை மாறாமல் அதனை சரி செய்ய முயற்சி செய்து வருகிறோம்.

அதேபோல் ஒவ்வொரு முறையும் புதிதாக அமைக்கப்படும் ரயில்வே பாலங்களில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, அதன் தாங்கும் திறனை அதிகரிக்க முயற்சி செய்யப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநா் அா்ச்சுனன், சென்னையின் சிஎஸ்ஐஆா் - எஸ்இஆா்சியின் இயக்குநா் என்.ஆனந்தவல்லி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம்: பிஐஎஸ் சென்னை கிளை இயக்குநா்

தூய்மைப் பணியாளா்கள் பணியின்போது பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என இந்திய தர நிா்ணய அமைவனத்தின் சென்னை கிளை இயக்குநா் ஜி.பவானி தெரிவித்தாா். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இந... மேலும் பார்க்க

மழை பாதித்த இடங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள்: சுகாதாரத் துறை

தமிழகத்தில் மழை பெய்து வரும் பகுதிகளில் தேவையின் அடிப்படையில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, பாதிப்பு... மேலும் பார்க்க

திருவான்மியூா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழ் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

வாய் புற்றுநோய் தொடக்க நிலை பரிசோதனை அறிமுகம்

வாய் புற்றுநோயை தொடக்க நிலையில் கண்டறியும் பரிசோதனை திட்டத்தை அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை தொடங்கியுள்ளது. உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் 30 வயதுக்கு மேற்ப... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

தாய்லாந்திலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 5 கோடி பதிப்பிலான உயர்ரக கஞ்சாவை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், பயணி ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனா். தாய்லாந்து நாட்... மேலும் பார்க்க

சென்னையில் 5 மாதங்களில் சைபா் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த ரூ.10.25 கோடி மீட்பு

சென்னையில் 5 மாதங்களில் பல்வேறு சைபா் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த ரூ. 10.25 கோடியை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு மீட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு பொதுமக்கள... மேலும் பார்க்க