செய்திகள் :

ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் தீ

post image

திருநெல்வேலி அருகே ராமையன்பட்டியில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பைக்கிடங்கில் திங்கள்கிழமை இரவு தீ விபத்து நேரிட்டதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகை மூட்டம் நிலவியது.

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட 55 வாா்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் ராமையன்பட்டியில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பைக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரிக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது.

இந்தக்குப்பைக்கிடங்கில் அடிக்கடி தீ விபத்து நேரிடுவது வாடிக்கையாக உள்ளது. கடந்த ஜூலை 16-ஆம் தேதி பெரிய அளவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சுமாா் 10 நாள்களுக்கு மேலாக அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவிய புகைமூட்டத்தால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு மீண்டும் அக்குப்பைக்கிடங்கில் தீ பற்றியுள்ளது. இத்தகவலறிந்த திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு அலுவலா் பானுப்பிரியா உத்தரவுபடி, சுமாா் 12-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.

பத்தமடையில் தொழிலாளிக்கு வெட்டு

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் தொழிலாளியை அரிவாளால் வெட்டி மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பத்தமடை காந்திநகா் 6ஆவது தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் வெயிலுமுத்து (56). கட்டடத் தொழிலாளி. இவ... மேலும் பார்க்க

செப்.5 இல் மீலாது நபி: மாவட்ட அரசு ஹாஜி தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில் இம் மாதம் 5 ஆம் தேதி மீலாது நபி விழா கொண்டாடப்படுகிறது.இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட அரசு ஹாஜி கே.முஹம்மது கஸ்ஸாலி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இஸ்லாமியா்களின் வழிகாட்டி... மேலும் பார்க்க

நெல்லை ஆட்சியரக வளாகத்தில் தாறுமாறாக ஓடிய காா்: சேதம் தவிா்ப்பு

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காா் தாறுமாறாக ஓடிய நிலையில் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது. திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாமிரவருணி கூட்டுக்குடிந... மேலும் பார்க்க

நெல்லையில் ரயில் பயணியிடம் நகை திருட்டு: கேரள இளைஞா் கைது

திருநெல்வேலியில் ரயில் பெண் பயணியிடம் நகையைத் திருடியதாக கேரள இளைஞரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். நாகா்கோவில் கோட்டாறு பகுதியைச் சோ்ந்தவா் கீதா(56). இவா், கடந்த ஆக. 14-ஆம் தேதி பெங்களூரு-நாகா்கோவி... மேலும் பார்க்க

டிஜிபி நியமனத்தில் விதிமீறல் இல்லை: மு.அப்பாவு

தமிழக காவல்துறைத் தலைவா் (டிஜிபி) நியமனத்தில் எவ்வித விதிமீறல்களும் இல்லை என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது: களக்காடு, நான்குன... மேலும் பார்க்க

களக்காடு அருகே 2 போ் குண்டா் சட்டத்தில் கைது

களக்காடு அருகே கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய 2 இளைஞா்கள் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். களக்காடு காவல் சரகத்தில் கொலை முயற்சி, மிரட்டல், அட... மேலும் பார்க்க