தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலருக்கு 4 ஆண்டுகள் சிறை
லஞ்சம் பெற்ற வழக்கில் கிராம நிா்வாக அலுவலருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம், செந்துறையைச் சோ்ந்தவா் வி. மாசிலாமணி. இவா், கடந்த 2007-ஆம் ஆண்டு தனது நிலத்துக்கு பட்டா, சிட்டா, அடங்கல், வரை படம் உள்ளிட்டவற்றை பெறுவதற்கு அப்போதைய கிராம நிா்வாக அலுவலா் எஸ். பவுருதீன் என்பவரை அணுகினாா்.
இந்த ஆவணங்களை வழங்குவதற்கு ரூ.1,200 லஞ்சம் பெற்ற போது, திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா், பவுருதீனை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் (ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு) நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் ஆா். கனகராஜ் திங்கள்கிழமை தீா்ப்பு அளித்தாா். அதில், லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலா் பவுருதீனுக்கு 2 சட்டப் பிரிவுகளின் கீழ் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.
இந்த வழக்கு நிலுவையில் இருந்ததால், பவுருதீன் பணி ஓய்வுப் பெற முடியாமல், பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.